Thursday, August 22

11 வயது சிறுவனைத் தேடி வந்த குருநாதருக்கு வயது 360..!

11 அணையாதீபம்..அருள் பேரொளி..! 

மன்னார்குடிக்கு பக்கத்துல பெரிய ஜமீன்..1600 ஏக்கருக்கு நிலபுலன்..ஆனா வாரிசுதான் இல்ல..அந்த ஜமீன்தாரருக்கு ஏற்கனவே மூணு மனைவி…இதுல வாரிசுக்காகவே..நாலாவது மனைவியும் வந்தாச்சு..ஆனாலும்..குழந்தை இல்ல..

கோயில்,கோயிலா சுத்தியும் பலனில்ல..எத்தனையோ பரிகாரம் செஞ்சும் பிரயோஜனமில்ல..மலடிங்கற பட்டத்தோடதான் எல்லாருமே இருக்கப்போறமா அப்படின்றதுதான் ஜமீன்தாரோட நாலு மனைவிகளுக்குமே கவலை..,

இந்த சமயத்துலதான் அந்த ஜமீனுக்கு வந்திருந்தாரு ஒரு சாமியார்..,

“… உன்னோட மனைவிக்கு இருக்குற மலடின்ற குறைய நான் நீக்கறேன். உனக்கு ஒரு  குழந்தை பொறக்கும். ஆனா, 11 வயசுவரைக்கும்தான் அது உன்னோட குழந்தை. அதுக்கு பிறகு, அத நீ எங்கிட்ட ஒப்படைச்சிடனும்.., உனக்கு மட்டுமே அந்தக்குழந்தை சொந்தம்னு நினைச்சின்னா அதோட உயிருக்கு உத்தரவாதம் கிடையாது, அந்த குழந்தை இந்த உலகத்துக்கே வழிகாட்டப் போகுது….”

சாமியாரோட இந்த டீலுக்கு ஜமீன் ஒத்துக்கிட்டாங்க..,

அதே மாதிரி ஜமீனோட நாலாவது மனைவிக்கு இரட்டைக்குழந்தை பிறந்து, 

அதில் ஒன்னு மட்டும் உயிர் பிழைச்சிருக்கு..,

அந்த குழந்தையோட நடவடிக்கைகளோ பிறந்ததுல இருந்தே  ரொம்ப வித்யாசமானதா  இருந்திருக்கு..,

அவரு வளந்து 6 வயசு சிறுவனா இருந்தப்ப..விநாயகருக்கு கொழுக்கட்டை செஞ்சு படைச்சிருக்காங்க..,

பூஜையெல்லாம் முடிஞ்சதும், “…ஏன் விநாயகர் வந்து கொழுக்கட்டைய சாப்பிடல..” னு சிறுவன் கேள்வி கேட்க, என்ன பதில் சொல்றதுன்னு யாருக்குமே தெரியல.

சாதிவெறி தலைதூக்கி ஆடினகாலமது…,

ஊருக்கு வெளியே ஆத்தங்கரையோரமா  தாழ்ந்த சாதியினரா இந்த சமூகம் அடையாளப்படுத்தி வச்சிருந்த ஜனங்களோட குடிசைங்க இருக்கு.
இவரு தினமும் அங்கபோய் அந்த குழந்தைங்களோட விளையாடிட்டு, அவங்க வீட்டுலயே சாப்பிட்டுட்டு வந்திடுவாரு..யார் சொன்னாலும் கேக்கமாட்டாரு…,

ஒன்னே..ஒன்னு..கண்ணே..கண்ணுன்னு..தவமா தவமிருந்து பெத்த பிள்ள..இப்படி ஏறுக்குமாறா பண்ணுதேன்னு..எல்லாருக்கும் கவலை..ஆனா, எதுவும் செய்யமுடியல..,

அதனால..தினமும் வெளியிலபோய் விளையாடிட்டு வர்ற சின்னஜமீனுக்கு மஞ்சள் அபிஷேகம் செஞ்சு தீட்டு கழிச்சிட்டுதான் வீட்டுக்குள்ள அழைச்சிட்டு போவாங்க..,

தென்னிந்தியாவோட பழமையான சிவன்கோயில் திருக்களர்ல இருக்கு. இந்த கோயிலோட பரம்பரை அறங்காவலரா இந்த ஜமீன் குடும்பம்தான் இருந்தது.
இந்தக்கோயில்ல ஒரு அம்மன் சிலைய புதுப்பிச்சு அதுக்கான ஒரு பூஜை ஏற்பாடு செய்திருந்தாங்க.

இதுல சின்னஜமீனுக்கு பரிவட்டம் எல்லாம் கட்டி முதல் மரியாதை கொடுத்து அவர பூஜை செய்யச் சொன்னாங்க.

அதுக்கு கொஞ்சமுன்னதான், அவரு அந்த கோயிலுக்கு வெளியே உக்காந்துட்டு இருந்த அந்த சிலைய செஞ்ச ஸ்தபதி கிட்ட போய்,
“…நீங்க ஏன் உள்ளே வராம..வெளியவே உக்காந்திட்டு இருக்கீங்க..”  ன்னு கேட்டிருக்காரு.

அந்த ஸ்தபதியோ, “…நேத்து வரைக்கும் என்னோட காலுக்கு கீழே இருந்த கல்லு அது, என்னாலதான் அழகான வடிவம் கொடுக்கப்பட்டு இன்னைக்கு அது கர்ப்பகிரகத்துல சாமியா போய் உக்காந்திருக்கு…அப்படின்னா..யாரு கடவுள்..படைச்சவனா..? படைக்கப்பட்டதா…?..” ன்னு ஸ்தபதி கேட்க,

சிறுவனுக்குள்ளே எங்கயோ பொறி தட்டிருச்சு…,

அவ்வளவுதான், “..நான் இந்த பூஜைய செய்யமாட்டேன்..” ன்னு சொல்லிட்டு போயிட்டாரு சின்ன ஜமீன்.

இதனால..ஜமீனுக்குள்ளயே..புகைச்சல் ஆரம்பமாயிடுச்சு…எல்லாமே, ஏறுக்குமாறா பண்ணிட்டு இருக்குற சின்னஜமீன, இனியும் உயிரோடு விடக்கூடாதுன்னு சிலர் முடிவு பண்ணிட்டாங்க..,

11 வயசு சிறுவனோட உயிருக்கு அவரோட உறவினர்களாலயே ஆபத்து ஏற்பட்டுடுச்சு…

சிறுவனோட உயிரை எப்படி பாதுகாக்கறதுன்னு ஜமீன் தவிச்சிட்டு இருக்குற சமயத்துலதான்…

பலவருஷங்கள் கழிச்சு திரும்பவும் அங்க வந்தாரு அந்த சாமியாரு…அப்ப சரியா அந்த சிறுவனுக்கு வயசு 11.

தான் ஏற்கனவே சொன்னத நினைவுபடுத்தினாரு, “..உன்னோட மகன் உயிரோட இருக்கணும்னா..எனக்கு கொடுத்த வாக்குறுதிபடி என்னோட அனுப்பிடு..,

இனி அவன் இந்த உலகத்துக்குதான் சொந்தம்..இல்லன்னா…இப்பவே அவனோட உயிருக்கு சிலர் கெடு வச்சிட்டாங்க..உனக்குதான் அவன்னு சொந்தம் கொண்டாடினா, அவன உயிரோட பாக்கமுடியாது…”

எங்கயிருந்தாலும் மகன் உயிரோட இருந்தாபோதும்னு ஜமீன் அந்த சாமியாரோட, சிறுவன அனுப்பிவச்சிட்டாங்க…,

அப்போ..இந்த 11 வயசு சிறுவன சிஷ்யனா அழைச்சிட்டுப்போன குருவுக்கு வயசு 360.

சாகாக்கலைய பயின்ற அந்த குருவுக்கு இந்த சிறுவன்தான் கடைக்குட்டி சீடன்…,

அவருக்கு மொத்தம் அஞ்சு சீடர்கள்..அவங்களோட பேரக்கேட்டீங்கன்னா…நிஜமாவே…ஆச்சரியப்படுவீங்க..,

அவரோட முதல் சீடர்…வடலூரைச்சேர்ந்தவர்,

இரண்டாவது சீடர்….ஷீரடி சாய்பாபா,

ஷீரடி சாய்பாபா

மூன்றாவது சீடர்…(இவரது பெயரையும், படத்தையும் இங்கு சேர்ப்பதை இவரது வழிவந்தவர்கள் விரும்பவில்லை),


நான்காவது சீடர்…ஆந்திரா, கொலகமுடி வெங்கய்யா சாமி,

கொலகமுடி ஸ்ரீ வெங்கய்யா சாமி

கடைசி மற்றும் 5 வது சீடர்தான் இந்த 11 வயது சிறுவன்..,

இதுல ஒவ்வொருவருக்கும்  குருவா வந்து வழிகாட்டினவருக்கு ஒவ்வொரு இடத்துலயும் வெவ்வேற பேரு…,

அதுக்கு சில சூட்சுமமான காரணங்கள் சொல்லப்படுது.(அதையெல்லாம் விளக்கிச்சொல்ல குருபரம்பரை பின்னால் வழிகாட்டும்)

இந்த சிறுவனுக்கு ரெண்டுகட்டமா பலவருஷ குருகுல வாசம் நடந்திருக்கு.
அவருதாங்க, இன்னைக்கு நாம பாக்கப்போற  ஞானி லட்சுமணன்..!


ஞானி லட்சுமணன்

இவரு மஹாசமாதி ஆன நாள்..2011 ஆகஸ்ட் 23ம்தேதி....,

நாளைக்கு(ஆகஸ்ட்23ம் தேதி) இவரோட மஹாசமாதி நாளை முன்னிட்டு, இவர் சமாதியான தஞ்சாவூர் ஆசிரமவளாகத்துல குருபூஜை நடக்குதுங்க..அதுக்கான பதிவுதான் இது…!

தன்னத்தேடி வர்றவங்களுக்கு, ஞானமடைவதற்காக இவரு காட்டினவழிதான்….அருள் பேரொளி சபை..!

“…அருட்பெரும்ஜோதி..அருட்பெரும்ஜோதி…அருட்பெரும்ஜோதி…தனிப்பெரும்கருணை…”ன்னு வள்ளலார் ஒரு அணையாஜோதிய ஏற்றிவச்சு, ஞானத்துக்கு ஜோதிவழிபாட்டை அறிமுகப்படுத்தினாரு.

ஞானி லட்சுமணன் 11 அணையாஜோதிகள ஏற்றிவச்சு ஞானத்துக்கான புதியதொரு வழி இதுன்னு சொல்லியிருக்காரு.

நாளை  அவரோட மஹாசமாதி (ஆகஸ்ட் 23ம்தேதி) தினம்…

அருள் பேரொளி சபை, எண்;1, ரியாஸ் நகர், பைபாஸ் ரோடு,தஞ்சாவூர்(போன்;04362-257595, மொபைல்-94867 42791) 

இந்த முகவரியில இருக்குற அருள் பேரொளி சபை வளாகத்துல தான் இந்த குருபூஜை நடக்க இருக்கு.


அருள்பேரொளிசபை,தஞ்சாவூர்

இங்க தரப்படுகிற பிரசாதம்…திருநீறு. அது ஒரு சூட்சுமமான மருந்து

எல்லா நோய்களுக்குமான மாமருந்துன்னு பயனடைஞ்சவங்க  சொல்றாங்க..,

23ம்தேதி அதிகாலை…பிரம்ம மூகூர்த்தத்துல…நடக்குற குருபூஜையில..மிகத்தெளிவா சில அதிர்வலைகள உணரமுடியும்னு அனுபவிச்சவங்க சொல்றாங்க..இதெல்லாம், வார்த்தைகள்ல சொல்லமுடியாதவை..இவற்றை அனுபவிச்சுமட்டுமே பார்க்கணும்..,
அதுவும் குருவருள் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்..!

டெயல்பீஸ்;

இந்த 5 சீடர்கள்ல ஒருத்தரான கொலகமுடி வெங்கய்யா சாமி பத்தி டீடெய்ல்ஸ் தேடும்போதுதான் தெரிஞ்சது, அவரும் மஹாசமாதியானது இதே ஆகஸ்ட்டுலதான்…,


கொலகமுடி ஸ்ரீ வெங்கய்யா சாமி

அதனால ஒவ்வொரு வருஷமும், ஆந்திரா கொலகமுடியில ஆகஸ்ட் 18 ல இருந்து 24 வரைக்கும் வெங்கய்யா சாமிக்கு ஆராதனா உற்சவம் நடத்தறாங்க.
இந்த விழாவுக்கு மட்டும் ஒவ்வொரு வருஷமும் 5 லட்சத்துக்கும் மேல பக்தர்கள் வராங்களாம்..அதுக்காக பிரம்மாண்டமான  விழா ஏற்பாடுகள் நடந்துட்டு இருக்கு,

அப்படின்னா அந்த மஹாகுருவோட பர்சனாலிட்டி எந்தளவுக்கு பக்தர்கள்கிட்ட ரீச் ஆகி இருக்கும்னு ஆச்சரியத்த ஏற்படுத்தினது இந்தசெய்தி....!

திரும்பவும் நம்ம விஷயத்துக்கு வருவோம்..,

ஞானி லட்சுமணன்..தன்னோட குருகுல வாசத்துல.. ,

ஒரு 6 வருஷத்த இமயமலை குகைகள்ல கழிச்சிருக்காரு…,

அதுல இதுவரைக்கும் நாம கேள்வியே பட்டிராத…பல யோக ரகசியங்கள்…குருகுல வாழ்க்கை முறைகள்னு.. நம்மள ஆச்சரியப்படுத்துற ஏராளமான அதிசயங்கள் இருக்கு…அதெல்லாம் பிரிதொரு பதிவில், தொடரும்…விரைவில்…,

அதனால..,

மறக்காம..நாளைக்கு…(ஆகஸ்ட்23ம்தேதி)..ஞானி லட்சுமணன் மஹாசமாதி தின குருபூஜையில கலந்துக்கோங்க.., எல்லாருக்கும் குருவோட ஆசி  கிடைக்க எல்லாருமே பிரார்த்திப்போம்…குருவேசரணம்..!

பின்குறிப்பு; ஞானி லட்சுமணன் அவர்களுடன் வாழ்ந்து அவருடைய ஞான அனுபவங்களை நேரடியாக அவரிடமிருந்தே கேட்டறிந்த ஞானியின் பிரதான சீடர் வெங்கட் நரசிம்மன் சொல்லக்கேட்டு எழுதப்பட்டதே இந்தத் தகவல்கள்.(இவர்தான் தற்போது அருள் பேரொளி சபையினை கவனித்து வருகிறார்) 

5 comments:

யதார்த்தன் said...

அருமையான பதிவு நண்பரே. ஞானிகள் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ள உங்கள் பதிவு உதவுகிறது.

பிரபஞ்சவெளியில் said...

நன்றி நண்பரே..உங்களால்தான் இது சாத்தியமானது..நன்றி..!

Anonymous said...

Hello, I belong to Meivazhi Salai and we know very well the history of our guru Meivazhi salai Aandavargal. Your comment about Meivazhi Salai Aandavargar is totally wrong.

Your comment about Vallalar also is wrong.

Please remove these comments and remove the picture of Meivazhi Salai Aaandavargal as soon as possible.

Please note I may need to report to BlogSpot if the comments and pictures are not removed.

Thanks for your co-operation!.

Anonymous said...

wrong information about meivazhi salai and his founder.plz remove the information

பிரபஞ்சவெளியில் said...

பெயரைக்கூட சொல்லாமல் கேட்டுக்கொண்ட அன்பரின் கருத்துக்கு மதிப்பளித்து அந்த குருவின் படமும் பெயரும் பதிவிலிருந்து நீக்கப்பட்டது.தவறான தகவலைத் தரவேண்டும் என்பது என் எண்ணமல்ல. இது எல்லாமே, குருபரம்பரையின் வழிநடத்துதலோடு மட்டுமே நடைபெறுகிறது.இங்கே, முதலில் பதிவிடச்சொன்னவர்களும் அவர்களே, இப்போது, நீக்கச்சொன்னவர்களும் அவர்களே, மற்றபடி, இங்கே குருக்களின் அனுபவங்கள் நம்மை பண்படுத்த மட்டுமே..மற்றபடி நான் சரி..நீங்கள் தப்பு என்று யாருடனும் வாதிடுவதற்காக ஒருபோதும் இந்தக்களத்தை நான் பயன்படுத்த மாட்டேன்..நன்றி