Saturday, June 28

' சென்னையில் வாழ்ந்த பறக்கும் பெண் சித்தர்..! ' தமிழ்த்தென்றல் திருவிகாவே நேரில் பார்த்திருக்கிறார்..!!

"…சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் ஒரு மாது இருந்தார்கள். அவர் காலம் சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும்

அவ்வம்மையார் பறவையைப் போல் வானத்தில் பறப்பார்.  
ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் மாடியில் பறந்து வந்து நின்றார். மானுடம் பறக்கிறது என்றால் விந்தையல்லவா

அக்காலத்தில் சென்னையில் வசித்த விஞ்ஞானிகள் பலர் சூழ்ந்து கொண்டு அம்மையார் நிலையை ஆராய்ந்தனர்

அப்போது சென்னை மியூசியத் தலைவராக இருந்த ஓர் ஐரோப்பியரால் பறவையார் நிலை பெரிதும் ஆராயப்பட்டது

அம்மையார் பறவை இனத்தில் சேர்ந்தவர் என்றும் அவரிடம் பறவைக்குரிய கருவி காரண அமைப்புகள் சில உள்ளன என்றும், ஊர்தல் (Evolution) அறப்படி அத்தகைய பிறவி இயற்கையில் அமைதல் கூடும் என்று அவரால் விளக்கப்பட்டது

அவர் விளக்கம் மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லலை

யான் தேசபக்தன் ஆசிரியராக இருந்தபோது நஞ்சுண்டாவுடன் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. அமரர் ராவ் அவர்கள், அம்மா சித்தர் இனத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னார்

பறவை நாயகியர் நிலை மனோதத்துவத்திற்கு எட்டுவதா? எண்ணிப்பாருங்கள்…"

-இது 'உள்ளொளி' நூலில் தமிழ்த்தென்றல் திரு.வி.க அவர்கள் 
பறவை சித்தர் பற்றி எழுதிய குறிப்பு.

இப்படிக் குறிப்பிடப்படும் அந்த பறவை சித்தரின் பெயர் ஸ்ரீசக்கரை அம்மா..,

ஸ்ரீ சக்ர அம்மா

சிவனையும், ஸ்ரீசக்ரத்தையும் வழிபட்டு வந்ததால், இவருக்கு ஸ்ரீசக்ர அம்மா என்றிருந்த பெயர் மருவி, காலப்போக்கில் ஸ்ரீ சக்கரை அம்மாவாக மாறிப்போனது..,

அட்டமா சித்திகளில் ஒன்றான, லஹிமா எனும் காற்றில் பறக்கும் சித்து கைவரப்பெற்ற மகாயோகி இவர்.அப்படி இவர் பறந்ததால் அப்போது சென்னையில் ஏற்பட்ட பரபரப்பைத்தான் திருவிகவே தனது நேரடி சாட்சியமாக பதிவு செய்து வைத்திருக்கிறார்..,

சுவாமி விவேகானந்தர், ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், அடிமுடிப்பரதேசி, போளூர் விட்டோபா சுவாமிகள், ஸ்ரீ ரமண மகரிஷி போன்றோருடன் ஸ்ரீ சக்ர அம்மாவிற்கு சந்திப்பு நிகழ்ந்தவைகளுக்கான ஆதாரங்கள் உள்ளன..,

அம்மா மஹாசமாதி அடைந்த பிறகு, இவரது சமாதிக்கு வந்த மஹாபெரியவா இங்கு ஐந்து நாட்கள் தங்கி இருந்து தவம் செய்திருக்கிறார்..,

'மஹாபெரியவா'

எத்தனை பெரிய சக்திமையமாக அம்மாவின் மஹாசமாதி இருக்கும் என்பதை மஹாபெரியவா இந்த இடத்தை தேர்வு செய்ததிலிருந்தே  நாம் புரிந்துகொள்ளலாம்..,

இத்தனை மகத்துவம் வாய்ந்த ஸ்ரீசக்ர அம்மாவின் மஹாசமாதி சென்னை திருவான்மியூரில் கலாஷேத்திரா ரோடில் அமைந்துள்ளது.

ஸ்ரீசக்கரத்தின் சக்தி பிரவாகமாக, திகழும் இந்த மஹாசமாதியில் அம்மாவின் சிலையுடன் ஒரு கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் நாளை 29 (ஜூன்) காலை 7.30முதல் 9மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 

நேரில் தரிசிக்க வாய்ப்பு இருப்பவர்கள் சென்று, ஸ்ரீ சக்ர அம்மாவின் பரிபூரண அருளை பெறுங்கள்..குருவே சரணம்..!

தொடர்புகொள்ள ; விஸ்வநாத குருக்கள் -9444017389

Thursday, June 26

அதிசய நிகழ்வின் வீடியோப்பதிவு...! ராம நாமத்தை நேரில் கேட்க வந்த குரங்கார் (அனுமன்)..!


'ராமநாமத்தை கேட்க அனுமனாக வெண்குரங்கு நேரில் வந்த அதிசய புகைப்படங்கள்' (முந்தைய பதிவு)

இதுதான் நம்ம பிரபஞ்சவெளியில் பிளாக்ல இதுவரை எழுதப்பட்ட பதிவுகள்லயே, அதிகம் பேரால் ரசிக்கப்பட்ட ஒரு பதிவு..,

காரணம், இந்த படங்கள்ல இருக்குற பக்தி பலரையும் சிலிர்க்கவைத்தது..,

அப்படிப்பட்ட நிலையிலதான், இன்னைக்கு எதிர்பாராம, 
அதே நிகழ்வோட ஆதாரமா, 

அந்த ராமாயண உபன்யாசத்துக்கு குரங்குவந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோக்களும் கிடைச்சது..,

புகைப்படங்களப்பாத்து நம்பிக்கை வராதவங்க கூட இந்த வீடியோவ பார்த்தா, நிச்சயம் பிரமிச்சுதான் போவாங்க..,


ஒரு சின்ன ரீகேப்

இந்தியாவின் மத்தியபிரதேசத்தில் இருக்கும் ஒரு முக்கிய நகரம் ரட்லம் (Ratlam). இங்கு ஊரின் மையப்பகுதியில காளிகாமாதா கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஸ்ரீ ராமாயண சரிதம் உபன்யாசம் நடந்து கொண்டிருந்தது. 

அப்போது, யாருமே எதிர்பாராமல் திடீரென, மேடைக்கு வந்த ஒரு வெண்குரங்கு, சிறிதுநேரம் ராமாயண உபன்யாசத்தை மேடையில் அமர்ந்து கேட்டுவிட்டு, அந்த உபன்யாசகரை கட்டித்தழுவி, தலைமீது, கைவைத்து ஆசி கூறிவிட்டு, அங்கிருந்த ஸ்ரீ ராமர் படத்தை வணங்கிவிட்டு சென்றது.., 

பார்த்து ரசியுங்கள்...ராமநாமம் ஜெபியுங்கள்..!


ஜெய்ராம்..ஸ்ரீராம்..ஜெய்..ஜெய்ராம்..!


Sunday, June 15

'வெள்ளிப்பேழையை பரிசளிப்பவர்தான் உனது குரு..!' வெளிநாட்டு அன்பருக்கு விவேகானந்தர் சொன்ன தீர்க்க தரிசனம்..!!

உலகம் ஓர் அற்புதம்…அந்த அற்புதம் எத்தனையோ கோணங்களில் எத்தனையோ முறைகளில் வெளிப்படும் விதங்கள்கூட அதிசயங்களே…

அந்த அதிசயங்கள் பலநூறு, ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஞானியாக, ஒரு சித்தபுருஷனாக பூவுலகில் அவதரிக்கின்றன.

ராமனோ, கண்ணனோ, ஏசுவோ, நபிகளோ…அப்படி அவதரித்தவர்களே.

ராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும் அப்படி அவதரித்தவர்களே ஆவர்.


விவேகானந்தர் (பழைய படம்)
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு.

மாக்ஸ்முல்லர் என்ற மகான், “உலகில் மனிதனாகப் பிறப்பதோடு பாரதத்திலும் பிறக்க வேண்டும். ஆன்மிக உலகில் பாரதத்திற்கு அப்படி ஒரு சிறப்பு உண்டு” என்று கூறினார்.

இந்த மண்ணில் எத்தனையோ சித்த புருஷர்கள். 
நரேந்திரன் என்ற சாதாரண மனிதன் சுவாமி விவேகானந்தனாக நிமிர்ந்ததும் 
இங்குதான்- ராமகிருஷ்ண தேவர் கருணையால்!

அந்த விவேகானந்த சித்த புருஷனை உலக அரங்கினுக்கு அனுப்பிவைத்த பெருமையும், அந்த ஞானவள்ளல் நாடு திரும்பியதும் அரசரே முன்னின்று அடியார்கள் புடைசூழ வரவேற்ற பெருமையும் இந்த மண்ணுக்கு உண்டு!

திக்குதிசை தெரியாத அமெரிக்க நாட்டில் அவருக்கு இந்த நாட்டின் சமயம் சார்ந்த மடம் ஒன்றை சான்று கேட்ட சமயம், “அந்த நாய் அங்கேயே பனியில் விரைத்துச் சாகட்டும்”
(Let the dog freeze and die) என்று பதில் அளித்த தாம். ( இதனை எடுத்துக் கூறியவர் லூயி ஃபிஷர்)
  
அச்சமயம் அவரை அடையாளம் கண்டுகொண்ட ஹார்வார்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ரைட் விவேகானந்தரைப் பார்த்து, “ஐயனே உங்களைப் பார்த்து சான்றிதழ் கேட்பது சூரியனைப் பார்த்து ஒளி வீச உனக்கென்ன தகுது இருக்கிறது என்று கேட்பது போல இருக்கிறது” என்றாராம்!

“To ask you, Swami, for credentials is like asking the sun to state its right to shine”
என்று கூறுவிட்டு, அந்த சர்வ சமய மாநாட்டுத் தலைவர் டாக்டர் பாரோசுக்கு தானே இவ்வாறு கடிதமும் எழுதினாராம்:
“நம்முடைய மிகவும் படித்த எல்லா பேராசிரியர்களையும் ஒன்றாகக்கூட்டினாலும், அவர்களைவிட, மெத்தப் படித்த மனிதர் இவர்…” என எழுதினாராம். அங்கு அவரது வாக்கெல்லாம் ராமகிருஷ்ணரது வாக்காகவே இருந்தது.

அவரை சித்தபுருஷனென ஏன் கூறுகிறோம்?


விவேகானந்தர் (பழைய படம்)

ஒரு அமெரிக்க அன்பர் விவேகானந்தரை குருவாக ஏற்றுக்கொள்ள கேட்டுக்கொண்ட சமயம், “உனக்கென குருநாதன் பிற்காலத்தில் வரப் போகிறார்” என்று கூறினாராம்.

அவரை எப்படி அடையாளம் காண்பது எனக் கேட்டபோது, “அவர் உனக்கு ஒரு வெள்ளிப் பேழையை பரிசளிப்பார்”  என்று கூறினாராம்.

 அவர் கூறியதைப் போலவே பல ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த அமெரிக்க அன்பருக்கு பரமஹம்ஸ யோகானந்தர் வெள்ளிப் பேழையைப் பரிசாக அளித்தாராம்!
அந்த அமெரிக்க அன்பர் விவேகானந்தரின் தீர்க்க தரிசனத்தை வியந்தாராம்!

“கோடிக்கணக்கான மக்கள் பட்டினியாலும், பசியாலும், அறியாமையாலும் வாடும்வரை யாருடைய வாழ்வையும் அழித்து தாம் கல்வி கற்றார்களோ அவர்களை கொஞ்சமும் நினைக்காத அவர்களை துரோகிகள் என குற்றம் சாட்டுகிறேன்”  என விவேகானந்தர் குமுறினார். 

ஒருமுறை விவேகானந்தர் ஐரோப்பா சென்றபொழுது, ஜெர்மனியில் வேதங்களை ஐம்பது ஆண்டுகள் முயன்று மொழிபெயர்த்து புத்தகங்களாக்கிய மாக்ஸ்முல்லரையும், உபநிடதங்களையும் கீதையையும் மொழிபெயர்த்த டஸ்கன் என்பவரையும் சந்தித்திருக்கிறார்.
(இந்த டஸ்கனின் மொழிபெயர்ப்பிலே திளைத்த ஸ்கோபன்ஹேவர் என்பவர் அவரது நூல்களை தலையில் வைத்து தெருவெல்லாம் கூத்தாடினாராம்).

விவேகானந்தர் தம் கடைசி நாட்களில் இவ்வாறு கூறினார்:

“…இந்த உடம்பை பழைய, கிழிந்த சட்டையைப் போல களைந்து எறிந்தாலும், இந்த உலகம் இறைவனோடு ஒன்றி இருப்பதை உணரும் வரை ஒவ்வொரு மனிதனையும் உள்நின்று ஊக்கிக் கொண்டே இருப்பேன்…”

விவேகானந்த சித்த புருஷர் நம் மக்கள் மத்தியில் 150 ஆண்டுகள் முன் வாழ்ந்து மறைந்தாலும் இன்றும் நம் மனதில் வாழ்கிறார்.


பகவான் யோகிராம் சுரத்குமாருடன் கவிஞர் பெருமாள் ராசு  
 கட்டுரையாளர் அறிமுகம்: ஸ்ரீ இரா.பெருமாள் ராசு, ஆசிரியராக 40 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; கிருஷ்ணகிரியில் வசிக்கிறார். கவிதை, ஓவியம் ஆகிய துறைகளில் இன்றும் தொடர்ந்து ஈடுபடுபவர், திருவண்ணாமலை சித்தர் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் அணுக்கத் தொண்டராக இருந்தவர், ஆனந்த விகடன் பத்திரிகையில் இவர் எழுதிய "மாத்தி யோசி" தொடர் பிரபலமானது. 10 நூல்களை எழுதி இருக்கிறார்.

நன்றி : பாபாஜி சித்தர் ஆன்மீகம் - தீபாவளி மலர் - 2013