Tuesday, August 13

சென்னையில இருந்து திருமலைக்கு பாதயாத்திரை!

AnandaNilayam

ஏற்கனவே, எழுதப்பட்ட இந்தப்பதிவ 77வயது பெரியவரின்….7ஆயிரம் கிமீ..பாதயாத்திரை-108 திவ்யதேச தரிசனம்! நிறையபேர் பாத்திருக்காங்க..

நிறையபேர் தங்களுக்குள்ள பகிர்ந்துகிட்டும் இருக்காங்க..

இந்த பயணத்துல நாமும் பங்கெடுத்துக்க முடியும்னு ஏற்கனவே சொல்லியிருந்தேன்..உடலால இல்லன்னாலும்..மனசால அத செய்யமுடியும்..இந்த புனிதயாத்திரைக்கு நம்மால கொடுக்க முடிஞ்ச பணத்தையோ, பொருளையோ கொடுப்பதன் மூலமா..நாமும் இந்த புண்ணிய கைங்கர்யத்துல கலந்துகிட்ட சந்தோஷம் கிடைக்கும்..

இந்த பயணம் முடிஞ்சி திரும்பி வந்து, 108 திவ்ய தேசத்து பிரசாதங்களை  பணம் கொடுத்த ஒவ்வொருவருத்தரோட வீட்டுக்கு கொடுத்தனுப்ப இருக்குறாங்க..

எவ்வளோ பெரிய வாய்ப்பு இது..அதனால..நாம பணம் கொடுக்கறது அவங்களுக்கு செய்யற உதவி இல்லீங்க..நமக்காக அவங்க பிரார்த்தனை செஞ்சிட்டு பிராசாதம் கொண்டுட்டு வறாங்க பாருங்க..அதுதான் அவங்க நமக்கு செய்யுற உதவி..முந்தின பதிவுல இந்த குழுவினருக்கு பணமோ, பொருளோ அனுப்பறது எப்படின்னு விவரங்கள் இருக்கு..ஆர்வம் இருக்கறவங்க இந்த பெருமாள் சேவையில பங்கெடுத்தக்கணும்னு நான் வேண்டி கேட்டுக்கறேன்..
(பாதயாத்திரை குழு செயலாளர் கண்ணன் - 9444854711 )

இன்னைக்கு இந்த பாதயாத்திரை குழுவோட கூட்டம் காரைக்குடியில் நடக்குது. அத முடிச்சிட்டு எல்லாரும் ஸ்ரீரங்கத்துல இருக்குற ஜீயர் சுவாமிகள பாத்து ஆசிவாங்குறாங்க...அடுத்து நாளை பாதயாத்திரை தொடங்குமிடமான கேரளா மாநிலம் திரூர் போய் முதல்நாளுக்கான ஏற்பாடுகளை கவனிக்க இருக்கறாங்க.

சோ..இந்த பாதயாத்திரையில பெரும்பாலானவர்களுடைய பங்களிப்பு இருக்கனும்னு நான் எதிர்பார்க்கிறேன்.அதனால, இந்தசெய்திய உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் பகிர்ந்துக்கோங்க..

அடுத்ததா, இந்த 108 திவ்ய தேச பாதயாத்திரையைப்பத்தி படிச்சுட்டு, இதுல துணைப்பிரிவா வருகிற, திருமலை திருப்பதி பாதயாத்திரை பத்தி சிலர் விசாரிச்சிருந்தாங்க.

அவர்களுக்கு சில தகவல்கள்...

வருகிற  29டிசம்பர்2013ல்  இந்த 108 திவ்யதேச குழுவில் உள்ள திரு ராமைய்யா  தலைமையில ஒரு குழு சென்னை புரசைவாக்கத்துல இருந்து திருமலை திருப்பதிக்கு பாதயாத்திரை  புறப்படுகிறது.இவங்க 2014 ஆங்கில வருடப்பிறப்புக்கு திருச்சானூர் போயிடுவாங்க..அங்கேயிருந்த 2ம்தேதி காலையில திருமலையில தரிசனம்.இந்தக்குழுவுல கலந்துக்க விரும்பறவங்க கண்ணனிடம் பேசுங்கள்...கண்ணன் மொபைல் 9444854711. 

அடுத்தது சென்னையிலயே மிகப்பெரிய அளவுல, நிறையபேர் கலந்துகிட்டு சென்னையிலிருந்து திருமலை திருப்பதி பாதயாத்திரையா போறதுல பெரம்பூர் ராமானுஜ சபா ரொம்பவே பிரபலம். 

இவங்க அக்டோபர் 19 காலை 6மணிக்கு புறப்படுறாங்க...இவங்கள இந்த எண்ல
தொடர்புகொள்ளுங்கள்..04425515666, 

இதுதவிர மேற்கு மாம்பலத்தில் இருந்தும் ஒரு குழு அக்டோபர் 18 ம்தேதி  அன்னைக்கு திருமலைக்கு புறப்படுகிறது.

அந்த விபரத்தைwww.ttptrust.com என்ற இணைய முகவரியில் பார்க்கலாம்.

108 திவ்யதேச பாதயாத்திரைக்கு நாம ஒவ்வொருத்தரும் பணமோ..பொருளோ கொடுத்து அந்த புனிதயாத்திரையில பங்கெடுத்தக்கணும்னு திரும்பவும் உங்க எல்லாரையும் கேட்டுக்கிறேன்..

ஓம் நமோ வேங்கடேசாய ..

குருவே சரணம்..!

0 comments: