Saturday, November 2

பூமியைத்தாக்க வந்த நரகா கிரகம், ராமர்,மஹாவீரர், 16ஆயிரம் கோபியர்கள், எஸ்கிமோக்கள்-தீபாவளியின் சுவையான பின்னணி


14 ஆண்டுகள் வனவாசம் முடிச்சிட்டு ராமர் இன்னைக்குதான் சீதையோடு நாடு திரும்பி பட்டாபிஷேகம் செஞ்சிக்கிட்டாரு..


ஜெயின் மதத்தை ஏற்படுத்தின மஹாவீரர் இந்த நாள்லதான் சமாதியடைஞ்சிருக்காரு…


நரகாசூரன் சிறைபடுத்தி வச்சிருந்த 16 ஆயிரம் கோபியர்களை அந்த சிறையிலிருந்து கண்ணன் விடுவித்த நாள் இன்னைக்கு…


ஆர்ட்டிக் வட்டத்திலே இருக்குற எஸ்கிமோக்கள், ஆறுமாத இருட்டுக்குப் பின்னால விளக்கு ஏற்றுவதும் இன்றுதான்..இந்த நாளை அவர்கள் நித்யஜோதின்னு குறிப்பிடறாங்க..


சுமார் ஐயாயிரம் வருஷங்களுக்கு முன், பூமியை நரகா எனும் கிரகம் தாக்கவிருப்பதாக இருந்த ஆபத்தினை கண்ணன் காப்பாற்றிய நாள் இது..அதை நினைவு கூறவே, விளக்கேற்றி மக்கள் இந்த தினத்தை கொண்டாடுவதாகவும் சொல்லப்படுவதுண்டு..


பிரக்ஜோதிஷ்பூர்..வட இந்தியாவுல இருக்குற இந்த ஊர்தான் நரகாசூரனோட தலைநகரம்…ப்ரக் அப்படின்னா முன்னாள் னு அர்த்தம். ஜோதி அப்படின்னா ஒளி ன்னு அர்த்தம். ஷ அப்படின்னா மறதின்னு அர்த்தம். புரம் அப்படின்னா, இடம் னு அர்த்தம் அதாவது உடம்பு அப்படின்னு அர்த்தம்

அதாவது முன்பு ஜோதியாக இருந்து பிறகு மறந்துபோன உடம்பு என்பது இதன் முழுமையான விளக்கம்..ஜோதியாக இருந்தது  வேறுயாருமல்ல..நாம்தான்..

அந்த ஜோதியை மறைத்த இருள்கள்.. நம் மனவருத்தங்கள்.. நோய்கள்.. வறுமை இன்னும் இவை போன்றவையே..

இவற்றை நீக்கிய வெளிச்சங்கள் ஆரோக்கியவாழ்வு..இன்பம்..செல்வம்.. ஞானம் போன்றவைதான்..!

நரகாசூரன் என்பது நரகம் என்ற இருளுக்கு அழைத்துச்செல்லும் தீய சக்தி..,
இந்த தீய சக்தியை கண்ணன் சத்தியத்தின் துணையோடு, அதாவது சத்தியபாமாவின் துணையோடு வெற்றிக்கொண்டான்.

முன்பு சொன்ன இருளை வென்று அதாவது அகற்றி ஞானம் என்ற வெளிச்சத்தை கண்ணன் பரப்பிய நாள்தான் தீபாவளி.

ஏன் இருளைத் தரவேண்டும்..பின் அதை அகற்றி வெளிச்சத்தைத் தரவேண்டும்..?

நாம் எத்தனை பேர் நம் மூக்கை நினைக்கிறோம்..? அதாவது சளி பிடித்தபோது தான் நமக்கு நம் மூக்கு ஞாபகம் வருகிறது. மூக்கை நினைக்கிறோம்..நாம் சுவாசிப்பதை இப்போழுதுதான் நினைக்கிறோம்..

நோய் என்ற அவதி வந்துபோன பின்பு தான் நமது ஆரோக்கியத்தின் அருமை புரிகிறது.

வெளிச்சத்தின் அருமை புரிய இருள் தேவைப்படுகிறது..

அறிவின் அழகு புரிய அறியாமை தேவைப்படுகிறது..

ஞானமும் இப்படித்தான்..!

இத்தனையும் நமக்குத் தெரிகிறதோ இல்லையோ..இந்த தீபாவளிக்குப்பின்னால் இவ்வளவு பின்னணி இருப்பது தெரிந்தால், நமக்குத் தெரியாதது இன்னும் எவ்வளவு இருக்கிறதோ என்று பிரமிக்கலாம்.

இந்த தீபாவளித் திருநாளில் குழந்தைகள், பெரியோர்கள் அனைவரும் மத்தாப்புகள் ஏற்றி, பட்டாசுகள் வெடித்து புதுப்புது ஆடைகளுடன், சிரித்து, செழித்து கொண்டாட எமது மகிழ்ச்சியும், அன்பும் கனிந்த வாழ்த்துகள்..


- அருட்பெருங்கவிஞர் பெருமாள் ராசு
நன்றி..பாபாஜி சித்தர் ஆன்மீகம் 2012 தீபாவளி மலர்