Wednesday, August 21

விசிறிசாமியார் பிறந்த கிராமத்தில் ஒரு விழா...!

பகவான் யோகிராம் சுரத்குமார்

சுவாமிஜி பிறந்த ஊர் உபியில(உத்திரபிரதேசம்) இருக்குற நரதரா(Nardara) அப்படிங்கற ஒரு அழகான கிராமம்..,

பகவான் அவதரித்த திருத்தலம்

கங்கைக்கரையோரமா இந்த கிராமம் அமைஞ்சிருக்கு..,

நதிமூலம், ரிஷிமூலமெல்லாம் பாக்கத்தேவையில்லன்னு சொல்வாங்க.. ஆனா, அவரு இந்த உலகத்துல ஸ்தூல உடம்போட நடமாடின எல்லா இடங்களுமே, நமக்கு அவரோட இருப்பை உணர்த்துற இடங்கள்..அதனால, அவரு பிறந்த இடத்தையும் நாம விட்டுவைக்கத் தேவையில்ல..,

அதனாலயோ, என்னவோ..இப்போ சுவாமிஜியோட பிறந்த ஊருலயும் அவரோட நினைவா ஒரு அடையாளத்த பதிக்கப்போறாங்க..

இந்த மாசம் (ஆகஸ்ட்) 28ம்தேதி, அன்னைக்கு...உத்திரபிரதேசத்துல இருக்குற நரதரா கிராமத்துல பகவான் யோகிராம் சுரத்குமார் அவங்களோட ஜன்மஸ்தான் திறப்புவிழா நடக்க இருக்கு.

இத திறந்துவைக்கப்போறவர் நீதியரசர் திரு.அருணாச்சலம் அவர்கள்...,

பகவான் அவதார திருத்தலத்தில் ஒரு திருவிழா

ஆகஸ்ட் 28ம்தேதி அதிகாலை 5மணிக்கு ஹோமத்தோட நிகழ்ச்சிகள் ஆரம்பமாகுது..,

அன்னைக்கும் முழுதும் சாமிகளோட நாமசங்கீர்த்தனத்துக்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க..,

அவ்ளோதூரம் போகமுடிஞ்சவங்க போய் வரலாம்..,

குழந்தையா சாமிஜி ஓடியாடின, விளையாடின அந்த பால்ய கால அனுபவங்களையெல்லாம் நிரப்பி வைத்திருக்கும், அந்த புனிதமான இடங்களையெல்லாம், பாத்து தரிசனம் செஞ்சுட்டு வரலாம்..,

முடியாதவங்க..(என்னையும் சேர்த்துதாங்க..) இங்கயிருந்தே சாமியோட நாம சங்கீர்த்தனம் செஞ்சாலே போதும்ங்க..

அந்த கருணைக்கடலோட எல்லையற்ற அருளாற்றல் நம்மையெல்லாம் சுற்றிநிற்கும்..,

யோகிராம் சுரத்குமார,
யோகிராம் சுரத்குமார,
யோகிராம் சுரத்குமார,
ஜெயகுருராயா..!

0 comments: