Monday, May 12

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் - 23

முந்தைய பதிவு (பாகம்22) ஸ்ரீவிஜயகுமார் சுவாமிகள் பேச்சு தொடர்கிறது..,


"...எந்த ஒரு மனிதனும் கடவுளைத்தேடி கண்டடைய முடியவே  முடியாது..நீங்க தேடினீங்கன்னாவே மாட்னீங்க..,தேடறதுக்கு வந்து எங்கயோ மறைந்திருக்ககூடிய மறைபொருள் எல்லாம் அல்ல  இறை தத்துவம்..,

வேகண்டா இருக்கு..வாப்பா..தயவுசெய்து என்ன அலவ் பண்ணேன்..உள்ள அலவ் பண்ணு..கெஞ்சுது..இறை அனுபூதி கெஞ்சுது..நாம தயாரா இல்ல..நோ..,ஆகையால இப்ப நாம என்னா கத்துக்கணும்..அலவ் பண்ண கத்துக்கணும்..எந்த ஒரு விஷயத்தையும் அலவ பண்ண கத்துக்கணும்..ரைட் சாமி..,

அவதாரப்பெருமைகள்ல பாத்தீங்கன்னா,கிருஷ்ண அவதாரம் நடந்துகொண்டிருக்கும்போதே, பலராம அவதாரம் நடந்துரும். ஆனா, பலராம அவதாரம் என்னாத்துக்கு எதுக்குன்னு நம்ம நிறையபேருக்கு தெரியவே தெரியாது..,பலராம அவதாரம்தான் இருக்குற அவதாரங்கள்லயே பெஸ்ட் அவதாரம்..,இதுல பெஸ்ட்..பெட்டரு..இது சூப்பர் குவாலிட்டி..இது தரை டிக்கெட்..இது பர்ஸ்ட் கிளாஸ்ன்ல்லாம் பிரிக்கல..ஒரு பேச்சுக்கு சொல்றேன்..,
என்ன காரணம்னா, பலராம அவதாரத்துல எந்த ஒரு ஆயுத த்தையும் அவரு எடுக்கவே மாட்டாரு..

ஏர்கலப்பைய வச்சிருப்பாரு..பலராம அவதாரத்துல ஆழ்ந்து பாத்தீங்கன்னா, ஏர்கலப்பைய வச்சிருப்பாரு..என்ன சொல்றாரு..தசாவதாரங்கள்ல பாத்தீங்கன்னா,
எங்கயுமே எந்த ஒரு அவதாரத்துக்குமே வேலை கிடையாது..பலராம அவதாரத்துல மட்டும்தான் அவரு ஒர்க் பண்ணுவாரு..என்ன விவசாயி..,

மஹாவிஷ்ணு..அவதாரம் எடுக்கும்போது புரபஷனலா எடுத்தது பலராம அவதாரம்..என்ன சொல்றாரு..தம்பி..ஏர்முனைக்கு எதிர்முனை எதுவுமே இல்ல..ஒரு பாட்டுல கூட வரும்..விவசாயத்த தயவுசெய்து கைவிட்றாத..பிளாட்டெல்லாம் அதிகமா போட்றாத..எதிர்காலத்துல வீடு இடிச்சி விவசாயம் செய்யறமாதிரி ஆயிடும்..எப்படி..இப்ப பிளாட்டு போட்டுடற..ஓகே ரைட்எதிர்காலத்துல என்னா ஆகும்..,வீட்ட இடிச்சி நீ விவசாயம் பண்ணுவே..அந்த நிலைமைக்கு வரக்கூடாது..,

நாங்கூட அறிவுறுத்துவேன்..இருக்கற புரபஷன்லயே..பகவானே காட்டின புரபஷன்..விவசாயம்..,

இருக்குற தொழில்லயே பெரிய தொழில் விவசாயம்..நாங்கூட சொல்லுவேன்..நிறையபேரு வருவாங்க..என்ன பண்றீங்க..சும்மா விவசாயம் பண்றேங்கம்பாங்க..யோவ்….அதான்யா பெரிசுவிசிட்டிங்கார்டு போடு..ராமசாமி, கீழே விவசாயின்னு போடு..ஏன் போடமாட்டேன்ற..இசிட்..கம்ப்யூட்டர் இன்ஜினியர்னு போட்டுக்கிற..டாக்டர்னு போட்டுக்கிற..லொட்டு லொசுக்கெல்லாம் போட்டுக்கிற..,

சாப்பிட்டு ஆவனுமா எல்லா பயலும்..ஆகையால..போடு..
பேர போடு..விவசாயின்னு போட்டு விசிட்டிங்கார்டு அடி..கொடு..,

தட் இஸ் கால்ட் பை ரெவல்யூஷன்..,

இருக்கற அவதாரங்கள்லயே..இந்த ரெவல்யூஷன்..புரட்சின்னு பாத்தீங்கன்னா,பலராம அவதாரம்..என்ன. .எல்லாம் போதும்டா..ஞானமாவது கீனமாவது..வயிறு முக்கியம்டா..,

எப்படி...அது ஞானமெல்லாம் பாத்துக்கலாம்...நாளைக்கு..நாளான்னிக்கு பாத்துக்கலாம்..ஒன்னும் பிரச்னையில்ல..சாப்பாட்டுக்கு என்ன வழி இப்ப..விவசாயத்த தயவுசெய்து கைவிட்றாத..அதைத்தவிர வேற ஒண்ணும் பண்ணமுடியாது..தட் இஸ் த பஸ்ட் புரபஷன்..காட்றதுதான் பலராம அவதாரம்..ரைட்சார்..,

முடிவா என்ன..கல்கி..கல்கி அவதாரத்த நான் எப்ப எடுக்கப்போறேன்..
நான் சொன்னா உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும்..,

                                                                                                     ...............நாளை தொடரும்,

0 comments: