Sunday, May 11

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் - 22


முந்தைய பதிவு (பாகம் 21) ஸ்ரீவிஜயகுமார் சுவாமிகளின் பேச்சு தொடர்கிறது..,

"...சிம்ப்ளா ஒரு விஷயம்..எனக்கே நடந்த ஒரு விஷயம் பாருங்களேன்..,
ஆசிரமத்துல யங்ஸ்டர்ஸ் நிறைய வருவாங்க..நம்பள தேடி..நல்ல பசங்க..,

தம்பிவாழ்க்கைய நல்லா என்ஜாய் பண்ணனும்னா, எதிரிகள் இருக்கக்ககூடாதுயா..எதிரிகளே இருக்கக்கூடாது..அப்படின்னு சொல்லிட்டு எல்லாருக்கும் ஒரு டம்மி ஷீட்டு கொடுத்தேன்..பேனா கொடுத்தேன்..யார்..யார் உனக்கு நெகடிவ்வா தெரியறாங்க..எழுதுறா..அப்படின்னேன்..எல்லா பயலும் அடிசனல் ஷீட்டு கேக்கறான்..,

ஒரே ஒருத்தன் மட்டும்  பாத்தீங்கன்னா, புஷ்பா, ரங்கதுரைன்னு எழுதியிருந்தான்..எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது..என்னடா, பரவாயில்ல ரெண்டே ரெண்டு பேர்தானா உனக்கு பிடிக்காது ஆளு இந்த உலகத்துல..,யார்ரா அதுன்னேன்..எங்க அம்மா, அப்பாங்கறான்..,

ஒன்னு இப்படி இருக்கான்..இல்ல..அப்படி இருக்கான்..அப்படி இருக்ககூடாது..,

ஜீவாத்மா..இந்த குசேலர் என்னா பண்றாரு..அப்படி வாயில்ல போறாரு..அங்க டிஸ்டர்ப் பண்றான்..வரக்கூடாதுன்னு..இந்த இடத்துலதான் மீறனும் நாம..உடைக்கறான் அந்த இடத்த..நோ..நான் என் பரமாத்மாவ பாக்காம திரும்பவே மாட்டேன்..அப்படின்னு சொல்லிட்டு என்ன பண்றான்..ஒரு கால தூக்கி மட்டும்தான் வைக்கிறான் குசேலன்..அங்க மேல இருந்து கிருஷ்ணர் பாக்கறாரு..,

எப்படிதெரியுமா ஓடியார்ராரு..ஒரு அடி தான் எடுத்து வைக்குது ஜீவாத்மா..பரமாத்மா என்னா பண்ணுது..டப்..டப்புனு தட்டி விடுது..அந்த கிரீடத்த கழட்டி வீசுது..போட்டிருக்கற நகையெல்லாம் கழட்டி வீசுது.. என்ன காரணம்..ஓடிப்போய் அரவணைக்கனும் அவன..அப்படி அரவணைக்கும்போது எதாவது குத்திரப்போகுது அவனை..எப்படி..கடவுள் எப்படி நினைக்குது பாருங்க..கடவுள் அப்படி நினைக்குமாம்..,

நம்ம  எத்தனித்தால்..அந்த இறை அனுபூதியை அனுபவிக்க எத்தனித்தால், கடவுள் என்ன பண்ணுமாம்..அது மிக எளிமையா மாறிடுமாம்..அதத்தான் அங்க கிருஷ்ணர் உணர்த்தராரு..

குசேலன் ஒரு அடிதான் வைக்கிறான்..இவரு நூறு அடிக்கு மேல ஒடிவர்ராரு..தடதடன்னு ஓடியாருராரு..,

டேய்..நண்பா..அப்பான்னு இறுக்கி கட்டி பிடிச்சிக்கராரு..இன்னும் கொஞ்சம் இறுக்கியிருந்தாருன்னா அவன் செத்துபோயிருப்பான்..,

அந்த நகையெல்லாம் கழட்டி வீசாராராம்..அய்யோ..நண்பனை கட்டிப்புடிக்கும்போது குத்திடுச்சின்னா என்ன பண்றதுன்னு..,

எடுத்த உடனேயே கேக்கறாரு..எப்பவுமே பாத்தீங்கன்னா, கடவுளை அடைய வேண்டும்..ஒரு நல்ல விஷயத்தை அடையவேண்டும்னா..ஞானம்ங்கரது மஸ்ட்..அந்த ஞானத்த அடையறதுக்கு புத்திசாலித்தனங்கறது ரொம்ப மஸ்ட்..,

அப்ப கிருஷ்ணர் என்ன கேக்கறாரு..பரமாத்மா..எனக்காக வேண்டி சிஸ்டர் என்ன கொடுத்தாங்க..சிஸ்டர்னா..யாரு..புத்தி..என்னா கொடுத்துச்சி..,

டக்குன்னு இவரு கையில இருந்த அந்த அழுக்குமூட்டைய கொடுத்தாரு..மத்தவனெல்லாம் பதர்றான்..,ஆஹா..ஆஸ்பிடல்ல சேக்கறமாதிரி ஆயிடப்போகுது..ஜான்டீஸ் கீண்டிஸ் வந்துடுப்போகுது.., ஒன்னுகெடக்கு ஒன்னு ஆயிடப்போகுது கிருஷ்ணருக்கு..,
கண்டதையும் சாப்பிடறானே..அய்யோ பாவம்..அப்டின்னு..நோ..நோ..அள்ளி ஒரு வாய் தான் போடறான்..குசேலர் வீட்டுக்கு போறதுக்கு முன்னாலயே அங்க எல்லாம் மாடமாளிகையா ஆகிப்போயிடுச்சு..,

கிருஷணருடைய மாளிகைய விட அவரு பெரிசா கட்டிட்டாரு அங்க..இப்படியாக..கிருஷணர பேசினாலே..குசேலர பேசச்சொல்லும்..அப்படின்னு..கிருஷ்ணர் என்ன சொல்ல வருகிறார்…,

நான் இறை அனுபூதி.. என்னை நீ அனுமதி அவ்ளோதான்..,

நம்முடைய கிறிஸ்துவ மதத்துல கூட அற்புதமான ஒரு பைபிள் வாசகம் உண்டு..,

கேளுங்கள்  தரப்படும்..தட்டுங்கள் திறக்கப்படும்..,

பகவத் கீதையில அற்புதமான ஒரு வசனம் உண்டு..,

ஸர்போதகேஸ்தத்தி…..தாந்தரதாயஹா..,

அப்படின்னா என்ன அர்த்தம்..நீ கேக்கவேண்டிய அவசியமே கிடையாது..ஆல்ரெடி உனக்கு கொடுத்து அனுப்பிச்சிட்டேன்..எப்படி..?
நீ கேக்கவேண்டிய அவசியமே இல்லயப்பா..உங்கிட்டயே இருக்கு..நீ தட்டவேண்டிய அவசியமே இல்ல..ஏன்னா, என்கிட்ட கதவே இல்ல..நீபாட்டுக்கு திபுதிபுன்னு உள்ள வரவேண்டியதுதான்..,

நீ கேக்க வேண்டிய அவசியமில்ல..ஆல்ரெடி உனக்கு கொடுத்துட்டேன்..உனக்கு தெரியல..,

என்னாச்சுன்னா, ஒரு பெரிய ஜமீன்தார்..ஒரு பெரிய ஆள்..அவரு காசிய நோக்கி போறாரு..நிறைய பணம் எடுத்துட்டுப்போறாரு..இத ஒரு திருடன் பாத்துடுறான்..ஆஹா, இவரு பணத்த அடிச்சிடுவோம்னு சொல்லிட்டு..ஐயா..ஐயா..பட்டைகிட்டையெல்லாம் போட்டுக்கிறான்..குபுகுபுன்னு..ஐயா..எங்க போறீங்க..காசிக்கு..நானும் காசிக்குதான்யா வறேன்..வா..வாப்பா..ரைட்..,

அங்க ஒரு மண்டபத்துல படுத்து தூங்கறாங்க..இவரு பணத்தையெல்லாம் எண்ணி பாக்கறாரு..திருடன் அப்படியே பாக்கறான்..சரி..நாம ஒரு ஒன் அவர் கழிச்சி இவரு தூங்கினபிறகு எடுத்துட்டு போயிடலாம்..,

அதேமாதிரி..தூங்கிடறாரு..அந்த ஜமீன்தார்..அந்த பணக்காரர்..உடனே, திருடன் எந்திருச்சி..தேடிகீடி பாக்கறான்..கிடைக்கல...,

மறுநாள் அதேமாதிரி பணத்த எண்றாரு..இவன் பாக்கறான்..ஒன் அவர் கழிச்சி எந்திரிச்சி பாக்கறான்..பணத்த காணோம்..என்னா சரி ரைட்..,

போயிட்டு திரும்பியே வந்துட்டாங்க..கடைசிநாள் விடைபெறப்போறான்.. அப்ப இவனே கேக்கறான்..சார்..சார்  எனக்கு ஒன்னு புரியவே இல்ல..நானும் டெய்லி பாக்கறேன்..பணத்த எண்ற நீ..நான் திருடன்தான் அதுக்காகத்தான் வந்தேன்..அந்த பணத்த நீ எங்க வைக்கற..,

நீ திருடன்றது எனக்கு நல்லாவே தெரியும்..நான் எண்ணி முடிக்கும்போது நீ தூங்கற இல்ல..உன் தலையாணிக்கு அடியிலதான் வைப்பேன்..,

இதுபோல்தான்..நம்முடைய எல்லாத்தையுமே கொடுத்ததாக கிருஷ்ணர் கூறிக்கொண்டே இருக்கிறாரு..,

பத்தா ஷப்த..சகல பூஷண சகல லோக ஷேம..போயிட்டே இருக்கும்..,
எல்லாமே கொடுத்துட்டேன்..நீ கேக்க வேண்டிய அவசியமே கிடையாது..எல்லாமே உன்கிட்டயே இருக்குங்கறத தெரிஞ்சிக்க தட்ஸ் ஆல்..,

அதேமாதிரி தட்ட வேண்டிய அவசியமே கிடையாது..,ஏன்னாக்கா..என்கிட்ட கதவே இல்ல..,

ஏய்..நான் உன்கிட்ட நான் பக்கத்துலயே இருக்கேன்.. என்ன அலவ் பண்ணு..நீ என்ன தேடி கண்டடைய எல்லாம் வேண்டாம்..,நான் ஒன்னும் திருடன் கிடையாது..நீ தேடறதுக்கு..

அப்பா தம்பி..நான்தான்டா உன்னை தேடிட்டு இருக்கேன்..,

ஆழ்ந்து புரிஞ்சுக்கணும்..,

                                                                                        .................நாளை தொடரும், 


0 comments: