Sunday, August 25

அனுமன்(குரங்காக வரும்) அனுமதித்தால் மட்டுமே தீர்த்தம்.., தீர்த்தமலையில்..ஓர் விநோதம்..!

தீர்த்தமலை

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல பழமையான கோயில்..தீர்த்தகிரீசுவரர் ஆலயம்.

தீர்த்தமலைய சம்திங் ஸ்பெஷல்னுதான் சொல்லணும்..!

பலமுறை இங்க போற வாய்ப்பு எனக்கு கிடைச்சிருக்கு..இப்பவும் கொஞ்சநாளா  இங்க போகணும்னு மனசுக்குள்ள ஒரு ஏக்கம்..இந்த சமயத்துலதான், தீர்த்தமலையப் பத்தி தினந்தந்தியில அழகான ஒரு கட்டுரைய எழுதியிருக்காங்க..,

தினந்தந்தியில் வெளியான கட்டுரை

ஏறக்குறைய எனக்கு திரும்பவும் தீர்த்தமலைய நேர்ல பார்த்தமாதிரியே ஒரு உணர்வு..,

சாதாரணமா, குடிக்கிற தண்ணியவே, வெள்ளி டம்ளர்ல குடிச்சா ஒரு பலன், மண்பாத்திரத்துல வச்சு குடிச்சா ஒரு பலன், சில்வர்ல குடிச்சா ஒரு பலன்னு சொல்ல நீங்க கேள்விப்பட்டிருக்கலாம்...

அப்படிதாங்க..தீர்த்தம்னு சொல்றதுக்கும்..கண்டிப்பா சில விசேஷ குணங்கள் இருக்கத்தான் செய்யுது..,

இடம்,பொருள்னு சொல்றமாதிரி, தீர்த்தம்னு சொன்னா, அந்த இடத்துக்கு நிச்சயமா ஒரு தனித்தன்மை இருக்கும்..,

ஒரு குறிப்பிட்ட இடம், அந்த இடத்துல உருவாகிற ஊற்று, இதபொறுத்துதான் அதோட மகத்துவம் கூடுது. தீர்த்தமா சக்தியடையுது.

தீர்த்தங்களோட முழுபலனும் நமக்கு கிடைக்க, ஒவ்வொரு தீர்த்தத்துல குளிக்கறதுக்கும், ஸ்பெஷலான ஒரு டைம் இருக்கு..,

இன்னொரு முக்கியமான விஷயம்,

தேவர்கள்...ரிஷிகள்தான் தீர்த்தரூபத்துல இருக்காங்க..., அதனால..அவங்களோட அனுமதியில்லாம..நாம அந்த இடத்துக்கு போகவே முடியாது.

அதனால, தீர்த்தம் அப்படின்னு சொன்னால, மிகப்பெரிய சக்தி மையத்த நாம அணுகறோம்னு ஒரு உணர்வு நமக்கு இருக்கனும்.., தீர்த்தங்கள பொறுத்தவரைக்கும் ஏராளமான சூட்சுமங்கள் இருக்குங்க..,

ஆனா, அதையெல்லாம் சாதாரண ஜனங்க புரிஞ்சிக்க மாட்டாங்க.. இல்லன்னா, அதையெல்லாம் தெரிஞ்சிகிட்டா, சிலர் அதை தவறா பயன்படுத்திக்குவாங்கன்னுதான்,  பல விஷயங்கள் இன்னுமும் சூட்சுமமாவே இருந்திட்டிருக்கு..

சாதாரணமா, நாம வீட்டுல குளிச்சாலே, உடம்புல இருந்து கண்ணுக்குத் தெரிஞ்ச சில அழுக்குகள் விலகுறமாதிரி, தீர்த்தங்கள்ல குளிக்கறதால, நமக்குள்ள நமக்கு தொந்தரவு கொடுத்திட்டு இருக்கற ஏதோ ஒண்ணு நிச்சயமா விலகுது...அதுக்கு பாவம்..தோஷம்னு எல்லாம் பேர் கொடுக்கத்தேவையில்ல..,

தீர்த்தமலையில  மெயின் தீர்த்தம் ராமர் தீர்த்தம்..!

சின்னபையனா இருந்தப்பவே என்ன இங்க அழைச்சிட்டு போயிருக்காங்க..,(என்னோட பெரியப்பா தன்னோட தோள் மேல என்னை உக்காரவச்சிட்டு மலையேறுன அந்த அனுபவம்..எனக்கு ரொம்பவே புதுசு)

எக்கச்சக்கமான குரங்குகள் இங்க சுத்திட்டு இருக்கும்..அதனாலயே, மலை ஏறத்தொடங்கறதுக்கு முன்னாலயே, மலையடிவாரத்துல, குரங்குக்கு போட பொரி, பழம்னு எதாவது வாங்கிட்டுதான் நிறையபேர் மலை ஏறுவாங்க ...,

அதேமாதிரி, இந்த மெயின் தீர்த்தத்துல(ராமர் தீர்த்தம்) எப்பவுமே தண்ணி வந்தபடியேதாங்க இருக்கும். மழைக்காலமா இருந்தா கொஞ்சம் அதிகமா வரும்..

மத்த நாட்கள்ல மலைஉச்சியில சின்னதா ஒரு பைப் பொருத்தியிருப்பாங்க..அந்த பைப் வழியா மெல்லிசா, தண்ணி கொட்டிகிட்டே இருக்கும்..


(இந்தபடத்துல ஒரு வட்டம் போட்டு காட்டியிருக்கிற இடத்துல, அந்த சின்னகோபுரத்துக்கு நடுவுலதான் அந்த பைப் இருக்கு..)

இதுலதான்..சிலசமயம் ஒரு ஆச்சரியம் நடக்கும்...இந்த தீர்த்தத்துல சிலருக்குமட்டும் குளிக்க போய் நிக்கும்போது, தண்ணியே வராது..என்னன்னு மேல பாத்தா, சில குரங்குகள்(அனுமன்..?) வந்து அந்த பைப்ப கை வச்சு அடிச்சிட்டிருக்கும்..,

இவங்க...கீழே இருந்து பதறுவாங்க..நாம ஏதோ செய்யக்கூடாத தப்பு செஞ்சிருக்கோம்..அதான் ஆஞ்சநேயரு வந்து தீர்த்தம் கிடைக்காம செய்யறாருன்னு சொல்லிட்டு அவரபாத்து,
 "..ஆஞ்சநேயா ..ஆஞ்சநேயா.." ன்னு புலம்புவாங்க.


ஆனா, அந்த குரங்குகள் தீர்த்த பைப்ல இருந்து கைய எடுக்கவே எடுக்காது.அதுமட்டுமில்லாம, அவங்களப்பாத்து பயங்கரமா முகத்த வச்சிகிட்டு உறுமவும் செய்யும்..(இதோ மேல படத்துல இருக்கே அதுமாதிரி..)

இத டெஸ்ட் பண்றதுக்காகவே,  அங்க குளிக்க நின்னுட்டு இருக்கற, மத்தவங்க நகர்ந்து வந்து அந்த தீர்த்தம் விழுற இடத்துல வந்து நிப்பாங்க..இப்ப அந்த குரங்கு கைய எடுத்துடும்..திரும்பவும், தீர்த்தம் கீழே விழும்..மத்தவங்க எல்லாம் குளிக்கலாம்..,

ஆனா, திரும்பவும், அந்த பழைய நபர், தானும் இப்ப தீர்த்தத்துல குளிச்சிடலாம்னு கூட்டத்துல இருந்து நகர்ந்து வந்தார்னா, திரும்பவம், குரங்கு பைப்பை மூடிரும்..

இந்த கூத்து இப்படியேதான் நடந்திட்டு இருக்கும்.

சம்மந்தப்பட்ட நபர், அங்கிருந்து கோயிலுக்குப்போய் மனதார தான் எதோ தப்பு பண்ணியிருக்கேன்..அத மன்னிச்சிருன்னு வேண்டிகிட்டு திரும்பவும் வந்தா, சில சமயங்கள்ல தீர்த்தம் கிடைக்கும்..சிலருக்கு அதுவும் கிடைக்காது..,

இந்த காட்சிய நானும் நேர்ல பாத்திருக்கேன்.

தீர்த்தமலை, ஞானத்தேடல் இருக்கற ஒவ்வொருத்தரும் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய ஒரு சக்திமையம்...அதுல மாற்றுக்கருத்தே இல்ல.

திருவண்ணாமலை மாதிரி..இங்கயும் நிறைய சாமியார்கள் சுத்திட்டு இருக்கறத பார்க்கமுடியும்.


ராம தீர்த்தம், குமார தீர்த்தம், கவுரி தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம்,அக்னி தீர்த்தம் இப்படி மிகமுக்கியமான தீர்த்தங்கள்..,

சின்ன மலைதான்..அதனால, ரொம்ப கஷ்டப்பட்டு மலை ஏறனுமோங்கற பயமெல்லாம் தேவையில்ல..

ஆனா, மேல ஏறினபிறகுதான், நாம வேற ஒரு உலகத்துக்குள்ள வந்திருக்கமோன்னு தோணும்.

அந்த அழக என்னோட வார்த்தைகள்ல வர்ணிக்கறதன்மூலமா, முழுமையா உங்களுக்கு உணர்த்தமுடியாது.., ஒவ்வொருத்தரும் அத நேர்ல தரிசிச்சுதான் உணரமுடியும்..,

முதல்ல அனுமந்த தீர்த்தம் போய் குளிச்சிட்டுதான், தீர்த்தமலை போகனும்னு ஒரு ஐதீகம்..,

அனுமந்த தீர்த்தத்துல பக்தர்கள் நீராடும் காட்சி!

 அரூர்ல இருந்து தீர்த்தமலைக்கு போகும்போதே, வழியிலயே தென்பெண்ணையாறு குறுக்கிடும் (கீழே இருக்குற படத்துல கோயில் பேக்டிராப்ல ஒரு பிரிட்ஜ் தெரியுது பாருங்க, அதுதான் மெயின் ரோடு, அரூர்ல இருந்து தீர்த்தமலைக்கு போறவழி..),

அனுமந்த தீர்த்தம்

இங்கதான் ஆற்றங்கரையில சின்னதா ஒரு கோயிலோட அனுமந்த தீர்த்தம் இருக்கு..

இங்கயிருந்து 12 கிலோமீட்டர் திரும்பவும் பயணம் தொடர்ந்தா, தீர்த்தமலை..,

நல்லதொரு சக்திமையத்துக்கு போய் வந்த திருப்தியை தீர்த்தமலை தரும்ங்கறத மட்டும் என்னால உறுதியா சொல்லமுடியும்..அதனால, தீர்த்தமலைக்கு ஒரு விசிட் போய்ட்டு வந்து உங்க அனுபவத்தயும் பதிவு செய்யுங்க..,

சில வலைப்பதிவர்களின் தீர்த்தமலை பயண அனுபவம், படங்களோட இங்க இருக்கு, அதயும் பாருங்க..,

தீர்த்தமலை ஓர் பயணப் பதிவு

தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில், தீர்த்தமலை

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

தீர்த்தமலை பற்றி
தீர்க்கமாய் ஒரு பகிர்வு..பாராட்டுக்கள்..!

பிரபஞ்சவெளியில் said...

உங்களின் பாராட்டு மட்டுமே, என்னை மேலும்,மேலும், எழுதத்தூண்டுபவை.. வருகைக்கும், வாழ்த்துக்கும்...நன்றி

Katheeravan said...

பாராட்டுக்கள்..!பாராட்டுக்கள்..!