
"…சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் ஒரு மாது இருந்தார்கள். அவர் காலம்
சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும்.
அவ்வம்மையார்
பறவையைப் போல் வானத்தில் பறப்பார்.
ஒருமுறை யான்
வசித்த கல்லூரியின் மாடியில் பறந்து வந்து நின்றார். மானுடம்
பறக்கிறது என்றால் விந்தையல்லவா?
அக்காலத்தில் சென்னையில் வசித்த விஞ்ஞானிகள் பலர்
சூழ்ந்து கொண்டு அம்மையார் நிலையை ஆராய்ந்தனர்.
அப்போது சென்னை
மியூசியத் தலைவராக இருந்த ஓர்...