Monday, September 9

என்னையும், ரஜினிகாந்தையும்(?) நேரில் வந்து பார்த்த மஹாஅவதார் பாபாஜி..! ஒரு யோகா மாஸ்டரின் நேரடி வாக்குமூலம்..!


மஹாஅவதார் குகைக்குள் ரஜினிகாந்த்..!

“..இன்னும் ஒரு மூணு மாசத்துக்குதான் நான் உயிரோடு இருப்பேன்னு டாக்டர்ங்க சொல்லிட்டாங்க..எனக்கு அத கேட்டதும், ஒண்ணுமே புரியல..

அப்போ நான் பாட்னா இன்ஜினியரிங் காலேஜ்ல முத வருஷம் படிச்சிட்டு இருந்தேன்..

அப்போதான், எனக்கு ரொம்ப உடம்புக்கு முடியாம போயிடுச்சுன்னு,டாக்டர பாக்க போயிருந்தேன்..

பரிசோதனை செஞ்சி பார்த்த டாக்டர்ஸ் என்னோட இதயத்துல
மூணு வால்வுமே பழுதடைஞ்சி போயிருந்தத கண்டுபிடிச்சாங்க..

அதுக்கப்புறமாதான்  என்னோட உயிருக்கு மூணு மாசம் கெடு விதிச்சாங்க...


அப்போ  பாட்னா மெடிக்கல் காலேஜ்ல ஹெட் ஆப் தி
டிபார்ட்மெண்டா இருந்தவரு  டாக்டர் சி பி டாக்குர்.

என்னோட கசின் ரஜினிகாந்த் அவரோட ஸ்டூடண்ட்..

அவருதான் என்னை டாக்டர்கிட்ட அழைச்சிட்டு போனாரு"..இல்ல..
இந்த பையன காப்பாத்தமுடியாது…இன்னும் மூணுமாசத்துல
இந்த பையன் செத்துடுவான்..."னு டாக்டர் உறுதியா சொல்லிட்டாரு..

அந்த டைம்ல பைபாஸ் சர்ஜரியெல்லாம் ரொம்ப ரொம்ப கஷ்டம்,அதுமட்டுமில்லாம, ரொம்ப காஸ்ட்லி.

அதுவுமில்லாம., ஹார்ட் வால்வு ரீபிளேஸ்மெண்ட்டெல்லாம்
ரொம்ப ரேர்..

அதெல்லாம் அப்போ யுஎஸ்ல மட்டும்தான் நடக்கும்..ரொம்ப
ரேராதான் இந்தியாவுல எங்கயாவது நடக்கும்..

அதனால, அப்ப எனக்கு சாகறத தவிர வேற வழியே இல்லன்னு
ஆயிடுச்சு..

இன்னைக்கும் இந்தியாவுல இருக்குற ஒரு மத சடங்கு…என்னன்னா,
தன் மகன் இறந்துபோயிட்டா, அந்த சடலத்த அவனோட
அப்பாதான் தோள்ல சுமந்துட்டு போகணும்னு
ஒரு  பழக்கம் இங்க உண்டு..

ஒரு அப்பாவுக்கு புத்திரசோகத்தவிட கொடுமையானது வேற எதுவுமே இருக்கமுடியாது..அதுலயும் இப்படி ஒரு கொடுமை..கூடவே கூடாது..,

தன்னோட மகன் சாகறத, பாத்து என்னோட அப்பா, கலங்கற
அந்த துக்கத்த நான் என்னோட அப்பாவுக்கு தர விரும்பல…

அதனால, நான் வீட்டு விட்டு ஓடிப்போயிட்டேன்..

எங்கேயாவது ஓடிப்போய் செத்துடலாம்..அது அப்பாவுக்கு தெரியாமயே போயிடும்..அவரும் என்னைக்காவது நா திரும்பிவருவேன்னு நம்பிட்டே வாழ்ந்திடுவாருன்னு நெனச்சுதான் நான் வீட்டவிட்டு ஓடிப்போனேன்.

நேபாள் நாட்டோட தலைநகர் காத்மாண்ட்,வழியா  திபெத்
காடுகளுக்குள்ள ஹிமாலயாஸ் போயிட்டேன்.

அங்கதான் ஒரு இளைஞர சந்திச்சேன்..நல்ல தேஜஸ்..பாக்கறவங்கள அப்படியே ஈர்க்குற அந்த கண்கள்...ஹிமாலயாஸ்ல சுற்றித்திரியுற விதவிதமான சாமியார்கள்ல..இவரு கொஞ்சம் வித்யாசமா தெரிஞ்சாரு..

மஹாஅவதார் பாபாஜி

என்னோட பிரச்னைய புரிஞ்சிகிட்டாரு.

உடனே, அவரு ஒரு கல்பாத்திரத்துல தண்ணிய ஊத்தி மரக்குச்சியால
கலக்கி ஏதோ, ஒரு மருந்து தயாரிச்சு எனக்கு குடிக்க கொடுத்தாரு..

அது குடிக்க குளுகோஸ் மாதிரிதான் இருந்துச்சு..அத குடிச்ச உடனே, எனக்குள்ள ஒரு நல்ல மாற்றத்த நான் உணரத் தொடங்கினேன்.

அவரோட ஒரு மூணு  நாள் அங்கேயே இருந்தேன்..அப்போ எனக்கு
அவரு சில மூச்சுப்பயிற்சிகளயும்  சொல்லிக்கொடுத்தாரு..

அதுக்கப்புறம் அங்கயிருந்து என்ன பொறப்பட்டு ஊருக்கு போகச்சொன்னாரு..ஊருக்கு வந்த கொஞ்சநாள்லயே..என்னோட
உடம்பு பழையபடி கொஞ்ச கொஞ்சமா சரியாகிடுச்சு.

என்னை என்னாலயே..நம்ப முடியல..ஆமா, மூணுமாசத்துல செத்துடுவேன்னு..டாக்டர்களால சொல்லப்பட்டவன்..இப்போ..ரொம்ப
நல்லா, ஆரோக்கியமானவனா, மாறிட்டே இருக்கேன்..

கொஞ்ச மாசம் கழிச்சுதான், டாக்டரைப் பார்க்கவே நான் போனேன்..அவங்களுக்கு நான் இன்னும் எப்படி உயிரோட இருக்கேன்னு பெரிய ஆச்சரியம்....அவங்களாலயும் நம்ப முடியல..,

எது எப்படியோ..என்னோட உடம்பு பரிபூரணமா சரியாயிடுச்சு..

என்னோட காலேஜ்லயே அப்பதைக்கு நான் தான்
ஆரோக்கியமான ஆள்னு சொல்ற அளவுக்கு நான் மாறியிருந்தேன்.

ஏதோ, சாகலாம்னு ஹிமாலயாஸ் ஓடினோம்..யாரோ, ஒரு சாமியார்
நமக்கு, ஏதோ, மருந்து குடுத்து காப்பாத்திட்டாருன்னுதான்
அதுவரைக்கும் நான் நம்பிட்டு இருந்தேன்.

அப்பதான் ஒரு நாள்..,

அப்ப நான் இன்ஜினியரிங் மூணாவது வருஷம் படிச்சிட்டு இருந்தேன்..என்னோட கசின் மெடிசன் படிச்சிட்டு இருந்தான்..நாங்க ரெண்டுபேருமே ஒண்ணாதான் தங்கியிருந்தோம்..

அன்னைக்கு காலையில 7 மணிக்கு என்னோட கசின் வந்து, (நாங்க அப்ப முதல்மாடி ரூம்ல இருந்தோம்)என்ன பாக்க யாரோ ஒரு சாமியார் வந்து,
கீழே, வெயிட் பண்ணிட்டு இருக்கிறதா, தகவல் சொன்னாரு..

உடனே, யாராயிருக்கும்னு நான் வேக வேகமா, , கீழே இறங்கிப்போனேன்..

அங்க....ஹிமாலயாஸ்ல எனக்கு மருந்து கொடுத்து, மூச்சுப்பயிற்சி
எல்லாம் சொல்லிக்கொடுத்தாரே.. அவரு..அந்த இளைஞன்தான்
என்ன தேடி வந்திருந்தாரு..எனக்கு தாங்கமுடியாத ஆச்சரியம்..!

இவ்ளோ பெரிய சிட்டியில, இவரு எப்படி , என்னோட முகவரிய
கண்டுபிடிச்சு இங்க வந்தாருன்னு, எனக்கு புரியவே இல்ல..

மாடிக்கு என்னோட ரூமுக்கு அவர அழைச்சிட்டு வந்தேன்…

"...எப்படி இருக்கீங்க..ன்னு வழக்கமான விசாரிப்புகள்..ஆனா, என்னோட மனசுக்குள்ள..இவரு எப்படி என்ன தேடி வந்தாரு..? அப்படின்னு தீவிரமான யோசனை ஓடிக்கிட்டே இருக்கு..

என்னால கொஞ்சம் கூட நம்பவே முடியல

அப்பதான் அந்த ரூம்ல இருந்த என்னோட கசின, "...கொஞ்சம்
பூ வேணும் போய் எடுத்துட்டு வாங்க.."னு வெளியே
அனுப்பிட்டு, எங்கிட்ட தனியா பேச தொடங்கினாரு..அந்த சாமியாரு

என்னோட கைய எடுத்து தன்னோட நெத்தியல வச்சிகிட்டு
"...அபி பி விஷ்வாஸ் நஹி ஹோ ரஹா ஹை..!"(இன்னும் உன்னால
நம்பமுடியல இல்ல..?)

"...இல்ல..இல்ல..நம்பறேன்…"
(அப்படின்னு,அவருகிட்ட சொன்னாலும்,என்னால,
இன்னமும் நம்ப முடியல.ஏன்னா,அது எப்படி எங்கேயோ
ஹிமாலயாஸ்ல இருந்தவரு..
என்ன தேடி கண்டுபிடிச்சு,இங்க வரமுடியும்..,)

இத பேசிட்டு இருக்கும்போதே..என்னோட கசின் பூ எடுத்துட்டு
ரூமுக்குள்ள வந்திட்டாரு.

உடனே, பேசிட்டு இருந்த டாபிக்க சாமியாரு மாத்திட்டாரு.

அந்த பூவ வாங்கி,"..எல்லாம் நல்லபடியா நடக்கும்.."னு எனக்கும்,
என்னோட கசினுக்கும் ஆசீர்வாதம் செஞ்சிட்டு..பூவ எனக்கு
கொடுத்தாரு,

"..சரி..நான் புறப்படறேன்.."னாரு..

நாங்க தனியா பேசிட்டு இருந்தப்போதான்..அந்த சாமியாரு..ஒரு
விஷயத்த என்ன நினைவுல வச்சிக்கச் சொன்னாரு..,

"..அடுத்தமுறை என்னை பாக்கும்போது எப்படி நீ என்னை
அடையாளம் கண்டுபிடிப்பே..."ன்னு கேட்டுட்டு அவரே
அதுக்கு ஒரு வழிமுறையும் சொல்லிக்குடுத்தாரு

"...என்னோட ரெண்டு பாதத்துலயும், கடைசி விரலுக்கு முந்தின விரல்,
மேல தூக்கினமாதிரி இருக்கும்.இதவச்சி நீ என்ன அடையாளம் கண்டுபிடிக்கலாம்..."னாரு.

அதுக்கப்புறமா, நானும், என்னோட கசினும், அவரோட
கீழே இறங்கிவந்து அவர வழி அனுப்ப வெளியே வந்தோம்..

எங்க ரூம்ல இருந்து வெளியே வந்து காம்பவுண்ட தாண்டினா,
வெளியே நேரே ஒரேயொரு பெரிய ரோடுதான்,

அப்படியிருக்க..எங்க கூடவே வெளியே வந்தவரு..வெளியே
 ரோடுக்கு வந்ததுமே, டக்க்குனு எங்க பார்வையில இருந்து  மறைஞ்சிட்டாரு..!

அவ்ளோ பெரிய ரோடுல, வேற எங்கயும் எங்க பார்வையில
இல்லாம மறையமுடியாது..

நாங்க ரெண்டுபேருமே, அப்படியே, ஷாக் ஆகிட்டோம்..
எப்படி உள்ளே இருந்து எங்களோடவே வந்த ஒருத்தர்
திடீர்னு இப்படி மாயமா மறையமுடியும்..?

அப்பதான் நான் சொன்னேன்,

"..இவரு நிச்சயம் பெரிய மகானா இருப்பாரு..இவருக்கு
நிறைய சக்தி இருக்கு.."அப்படின்னு சொன்னேன்.

அந்த வயசுல எனக்கு அப்படி ஒரு அற்புதமான அனுபவம்..

அப்பவே,நான் முடிவு பண்ணிட்டேன்,இன்ஜினியரிங்
முடிச்சிட்டு  வேலைக்கு போகப்போறதில்ல.
இந்த சாமியாரத் தேடித்தான் போறதுன்னு
அப்பவே முடிவெடுத்துட்டேன்..

அதுக்கப்புறமா..ஒரு ரெண்டு, மூணு மாசத்துக்கு அப்புறமா,
என்னோட பிரண்ட் ஒரு புக் கொடுத்தான்.

அது  ஆட்டோபயாகிராபி ஆஃப் ய யோகி.

அந்த புத்தகத்த பாத்திட்டு இருக்கும்போதுதான்,
திடீர்னு ஒரு படத்த பாத்தேன்..

மஹாஅவதார் பாபாஜி

அது..அது..அவருதான்..

நான் ஹிமாலயாஸ்ல  சந்திச்சவரு..இதோ,இங்க என்ன
தேடி வந்த சாமியாரு..,அவருதான் மஹாஅவதார் பாபாஜின்னு
அந்த புத்தகத்துல அவர பத்தி குறிப்பிட்டிருந்தப்போதான்
எனக்கு உண்மையெல்லாம் புரிஞ்சது.

நான் பாத்தது,அந்த மிகப்பெரிய மகான்..மஹாஅவதார்
பாபாஜியைத்தான்னு நினைச்சதுமே எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துப்போச்சு.

பாபாஜிதான் என்னை காப்பாத்தியிருக்காரு.

இனி இந்த வாழ்க்கை பாபாஜிக்குதான் அப்பவே தீர்க்கமா முடிவு பண்ணிட்டேன்..

எப்படியும், திரும்ப நான் அவர கண்டுபிடிச்சிடுவேன்னுற
உறுதியோட நாட்கள் கழிஞ்சது.

அதேமாதிரி என்னோட படிப்பு முடிஞ்சதும், பாபாஜியத்தேடி புறப்பட்டேன்.

அதே ஹிமாலயாஸ்ல நான் முன்னாடி அவர சந்திச்ச
அதே இடத்துக்கு போனேன்..

பாபாஜி குகைக்கு செல்லும் வழிகாட்டிப்பலகை

அங்க நான் முன்னாடி அவர சந்திச்சப்ப இருந்த அந்த குகை
இப்போ காணோம போயிருந்தது..,

அந்த இடமே மாறிப்போயிருந்தது..எனக்கு ரொம்பவே ஆச்சரியமா இருந்தது.

அவரத்தேடி நான் ஹிமாலயாஸ்ல, இன்னும் உள்ளே
அவரத்தேடி போயிட்டே இருந்தப்பதான், சில சாமியார்கள சந்திச்சேன்.

அவங்க என்ன ரொம்ப அன்போட வரவேற்றுப் பேசினாங்க..,

நான் அங்க எந்த சாமியார பாத்தாலும், அவங்களோட
பாதத்தைதான் மொதல்ல பாப்பேன்..
அவரு பாபாஜியான்னு கண்டுபிடிக்க
அவங்களோட பாதத்துல விரல் தூக்கியிருக்கான்னு
பார்வையாலயே செக் பண்ணுவேன்.

ஆனா, அவங்க பாதம் சாதாரணமாத்தான் இருந்தது..

அங்க பாபாஜி இல்ல..ஆனா, நான் பாத்த அந்த சாமியாருங்க என்ன தங்களோட பாதுகாப்பா தங்க வச்சிகிட்டாங்க..அவங்களுக்கு
என்ன பத்தி நல்லா தெரிஞ்சிருக்கு..அதுதான் எனக்கு ஆச்சரியம்..

ஒரு மூணுமாசத்துக்கு அப்புறமாதான் அங்க பாபாஜி வந்தாங்க..அவர பாத்ததும்தான் எனக்கு போன உயிரு திரும்ப வந்தமாதிரி ஒரு நிம்மதி..

அவரோட பாதத்த பாத்தேன்..அந்த விரல்கள் தூக்கியிருந்தத பாத்ததுமே..அவர்தான் பாபாஜின்னு ஊர்ஜிதப்படித்திக்கிட்டு, உடனே, அவரோட கால்ல விழுந்துட்டேன்.

"..இனியும்..என்ன விட்டுடாதீங்க..இனிமே,என்னோட வாழ்க்கையே உங்களுக்காக மட்டும்தான்.நீங்கதான் இனி எனக்கு.."ன்னு,அவரோட
கால பிடிச்சிட்டு கதற தொடங்கிட்டேன்..

கூப்பிய கரங்களோட நான் சொன்னேன்,"…ஆப்கே சிவா..மேரா ஜீவன் கா..அஸ்தித்வ நஹி ஹை..!(நீங்க இல்லாம..என்னோட வாழ்க்கைக்கு அர்த்தமில்லை..)

உடனே, பாபாஜி என்ன ஆசீர்வதிச்சி ஏத்துக்கிட்டாரு,"..துமாரி பீனா, மேரி ஷோபா நஹி ஹை.."(நீ இல்லாம எனக்கு பெருமை இல்ல..)

எங்க ரெண்டுபேருக்கும் நடுவுல நடந்த அந்த உரையாடல்..உணர்ச்சிபூர்வமானது..

அதுக்கப்புறமா, அடிக்கடி அந்த சாமியார்களோட தங்கியிருந்த
 என்ன வந்து பாபாஜி பாப்பாரு..ஆனா, அப்பவும், பாபாஜி எங்க தங்கியிருக்காருன்னு எனக்கு தெரியாமத்தான் இருந்தது.

அடிக்கடி வந்து எனக்கு ஒவ்வொரு விஷயமா சொல்லிக்கொடுத்தாரு..
அங்க இருந்த மத்த சாமியார்களும், எனக்கு சில பயிற்சிகள சொல்லிக்கொடுத்தாங்க..(அட்வான்ஸ்ட் யோகா டெக்னிக்ஸ்)

அங்கயே ஒரு ரெண்டரை வருஷம் இருந்தேன்..இந்த உலகத்தையே மறந்திட்டு இருந்தேன்..

அதுக்கப்புறம்தான் பாபாஜி ஒருநாள், "..அவ்ளோதான்..உன்னோட
பயிற்சி எல்லாம் முடிஞ்சது.நீ ஊருக்கு போ,அப்படின்னு சொன்னாரு..

உடனே, நான் கரகரன்னு கண்ணீர் விட்டு அழத்தொடங்கிட்டேன்'..உங்கள விட்டு என்ன போகச் சொல்றீங்களே..நான் எங்க போவேன்…"

அப்பதான் பாபாஜி சொன்னாங்க,"..நீ போய் என்னோட வேலைகள செய்யவேண்டியிருக்கு..க்ரியாயோகவப் பத்தி உலகத்துக்கு நீ சொல்லணும்..
இப்போ உலகத்துல எல்லாரும் யோகவ பணம்பண்ற விஷயமா மாத்திட்டாங்க..,

..இப்போ, யோகா சொல்லித்தர்றது மூலமா பணம் சம்பாதிக்கலாம்னு
உலகம் முழுக்க ஒரு மோசமான நிலைமை உருவாகிட்டுவருது..

...யோகா ஒரு ஒழுக்கம்..ஆனா, இன்னைக்கு யோகாவ ஒரு சிகிச்சையா மாத்திட்டாங்க..அதுவும் பதஞ்சலி முனிவரோட பேர பயன்படுத்திகிட்டு எல்லாரும் யோகாவ வச்சி பணம் பண்ணிட்டு இருக்காங்க..

அதனால, நீ போய் இந்த சூழல மாத்து..பணத்துக்காக யோகான்னு இல்லாம..இதை எல்லாருக்கும் சொல்லிக்கொடு..அப்படின்னு என்ன ஆசீர்வதிச்சி அனுப்பி வச்சாரு.."

இப்படி மஹாஅவதார் பாபாஜிய நேர்ல சந்திச்சு அவருகிட்ட
க்ரியாயோகாவ கத்துகிட்டு வந்து உலகம் முழுக்க
அதை பலருக்கும் சொல்லிக்கொடுத்திட்டு இருக்கறவருதான்...
கியான் சுவாமி (GYAN SWAMI)  இப்ப இவருக்கு வயசு 62..

கியான் சுவாமி

இப்பவும் தான் ஆரோக்கியமான ஆளா இருக்கேன்னா அதுக்குக் காரணம்..மஹாஅவதார் பாபாஜிதான் என்கிறார் கியான் சுவாமி..!

."...இதயநோயால நான் அப்போ பாதிக்கப்படலேன்னா, பாபாஜிய நான் சந்திச்சிருக்கவே முடியாது..

பாபாஜி..இன்னைக்கும் உயிரோட சூட்சம ரூபத்துல இருந்திட்டு
இருக்கிற,ஒரு சக்தி வாய்ந்த மாஸ்டர்..,

அவருக்கு இறப்பு என்பதே கிடையாது..,

இன்னைக்கும் முழுமனசோட நீங்க அவர பாக்கணும்னு நினைச்சா,
 உடனே அவரே  உங்க முன்னால வந்து நிப்பாரு.
இது நூறு சதவீதம் சத்தியம்..

அவர நான் சந்திச்சது, சில வருஷங்கள் அவரோட இருந்தது எல்லாமே, அற்புதமான அனுபவங்கள்.."

இப்படிச்சொல்லி பரவசப்படுகிறார் கியான் சுவாமி.

இதுல ஒரு ஆச்சரியமான ஒற்றுமைய பாத்தீங்கன்னா, கியான் சுவாமியோட கசின் பேரும் ரஜினிகாந்த்...அவரு கியான் சுவாமியோட,சேர்ந்து
பாபாஜிகிட்ட, நேர்ல ஆசீர்வாதம் வாங்கினத நாம பாத்தோம்.

இங்க தமிழ்நாட்டுல பாபாஜிய சினிமா மூலமா (பாபா)
வெளியுலகத்துக்குக் காட்டி, அவரோட பக்தரா தன்ன அறிமுகப்படுத்திக்கிட்டவரு..
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..,

இந்த குருபரம்பரையில வந்த இந்த பேரு பொருத்தமும் எனக்கு
ரொம்பவே ஆச்சரியத்த கொடுத்தது..அதனாலதான்..இந்த பதிவோட தலைப்புலயும்..பதிவோட தொடக்கத்துலயும் ரஜினிகாந்த்
பாபாஜி குகைக்கு போய்வந்த படமும் சேர்க்கப்பட்டிருக்கு..,

ஓம்..,
ஓம்..,
ஓம்..,

பிரணவப்பிரவாகம்.,ஊற்றாக பாயும் நாள்..இன்று...,

விநாயகர் சதுர்த்தி..,

எல்லோரும் ஞானத்தில் திளைக்க..அந்த மஹாஅவதார் பாபாஜியின் குருவருள் துணை செய்ய பிரார்த்திப்போம்..குருவேசரணம்...!

5 comments:

Suresh Kesavan said...

பதிவில் இனைத்துள்ள படம் அவருடைய உண்மையான படமா

பிரபஞ்சவெளியில் said...

ஆம்..

அ.பாண்டியன் said...

வணக்கம் அய்யா, தங்களின் ஆன்மீகம் அசர வைக்கிறது. பாபாஜியின் மகிமையை அழகாகப் படம் பிடித்தது போலப் பகிர்ந்துள்ளீர்கள். தங்களின் எழுத்திலும் பக்திச்சுவை ததும்பி நிற்பதை உணர முடிகிறது. மிக்க நன்றி அய்யா. தொடருங்கள். நன்றி.

பிரபஞ்சவெளியில் said...

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்..நன்றி..!

Venkataraman Reddy, Chennai said...

MAHA AVATAR BABA JI LOOKS LIKE MY GRANDFATHER. WOW. FROM TONIGHT ONWARDS I BECAME THIS BABA DEVOTEE.