Thursday, September 12

'தீயில் இருந்து பறந்து வந்தது…,' விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதாவின் அற்புத அனுபவம்..!

சாரதா தேவியுடன் நிவேதிதா

“….நல்ல தூக்கத்துலதான் அப்படி ஒரு கனவு…இராமகிருஷ்ண பரமஹம்சரோட உருவம் என் கண்ணுக்கு அச்சு அசலா காட்சி தந்தது..ஆனா, அடுத்து நான் நேரடியா பாத்த காட்சி, என்னை பதற வச்சிருச்சு..நான் பாத்துட்டு இருக்கும்போதே.... அந்த மகானோட ஆன்மா,தன்னோட உடல விட்டு வெளியேற..அந்தக்காட்சி எனக்கு துல்லியமா தெரிஞ்சது..இது என்ன பதட்டப்பட வச்சாலும், இப்படி ஒரு காட்சிய பாக்கறது எனக்கு ஒரு புது அனுபவம்..

..காலையில எழுந்ததும் இந்தக்கனவு..ஒரு தெளிவான பதிவா நினைவுலயே இருந்தது.... பரமஹம்சர்தான்  ஏற்கனவே, உடல விட்டுட்டு சமாதியாயிட்டாரேன்னு என்னோட உள்மனசு சொல்லுது..ஆனா, இங்கே என்னோட கனவுல..உயிரோட காட்சி தந்தாரு..அவரோட உயிர் உடலவிட்டு பிரியறதையும் நாம நேரடியா பாத்தோமே..இது எதுக்கான அறிகுறி..,

இப்படின்னு பலமாதிரி குழப்பிகிட்டே இருந்தப்பதான், அந்த காலை நேரத்துலயே என்னப்பாக்க பேலூர் மடத்துல இருந்து  ஒரு சாமியார் வந்திருக்கறதா, எனக்கு தகவல் சொன்னாங்க..உடனே, வெளியே வந்து அவர சந்திச்சேன்...அவரு எனக்கு ஒரு அவசர  தகவல கொண்டு வந்திருந்தாரு..

கனவுக்கும் இதுக்கும் ஏதும் தொடர்பு இருக்குமோ….கை நடுங்க..அத வாங்கிப் படிக்க... எனக்கு முன்னால இருக்குற எல்லாமே..அப்படியே ஒரு சூன்யமா மாறிட்டு இருக்கற மாதிரி ஒரு உணர்வு….

கண்கள்லாம் இருட்ட…நான் அப்படியே..மயங்கி சரிஞ்சிட்டேன்..அங்க இருந்தவங்க..என்னை ஆசுவாசப்படுத்தி திரும்பவும் எழுப்பி உக்காரவச்சாங்க..

என்ன கலங்கடிச்ச அந்த தகவல் இதுதான்..

நேத்து ராத்திரி..இராமகிருஷ்ண பரமஹம்ஸர் என்னோட கனவுல தன்னோட உடல விட்டு உயிர் பிரியுற மாதிரி நான் கனவுகண்ட அதே நேரத்துல, பேலூர் மடத்துல விவேகானந்தர் தன்னோட உடல விட்டுட்டாரு…,

விவேகானந்தர்

இந்த தகவல கேள்விப்பட்டு உடனே, நான் பேலூர் மடத்துக்கு புறப்பட்டுப்போனேன்…அங்க ஹால்ல, விவேகானந்தரோட உடல்,வைக்கப்பட்டிருந்தது.

விவேகானந்தரின் உடல் வைக்கப்பட்டிருந்த பேலூர் மடம்

காட்சி கண்ணுக்கு தெரிஞ்சாலும், புத்தியால அத ஒத்துக்கவே முடியல..அவருக்கு பக்கத்துலயே உக்காந்து விசிறிக்கிட்டே இருந்தேன்..

இனி,அவர பாக்கவே முடியாது.எப்பவும் அவருகூடவே நான் இருக்கணும்.என்ன செய்யலாம்..? அப்பதான் எனக்கு, ஒரு யோசனை தோணுச்சு…,

அவரோட கம்பீரமான, அந்த காவி அங்கியில இருந்து ஒரு சின்ன துண்ட கட் பண்ணி எடுத்து வச்சிக்கிட்டா என்ன..? 

இப்படி நான் நினைச்சிட்டு இருக்கும்போதே..அங்க இருந்த ஒரு துறவியும்,  என்னோட   மனசுல ஓடிட்டு இருந்த  விஷயத்துக்கு ஏத்தமாதிரி ஒரு பதில சொன்னாரு

"....நிவேதிதா..நீ வேணும்னா..சுவாமிஜியோட துணியில இருந்து அவரோட நினைவுக்காக ஒரு துண்டு எடுத்து வச்சிக்கோ.."

சமாதியான ஒரு துறவியோட காவியுடையில இருந்து இதுமாதிரி துணிய கட் பண்ணி எடுத்துவைக்கறது சாஸ்திரப்படி சரியா, தப்பா..? 

எனக்குத் தெரியல..அதனால, வேண்டாம்னு முடிவெடுத்துட்டேன்..

அதக்கப்புறமா, விவேகானந்தரோட உடல் எரியூட்டு மேடையில வைக்கப்பட்டது..அவரோட உடல் எரியூட்டப்பட்டது.

சாயந்திரம் 6 மணி வரைக்கும் தீ கொழுந்து விட்டு எரிஞ்சிட்டு இருந்தது. இதையெல்லாம் ஒரு சாட்சியா மட்டுமே, இருந்து நான் பாத்துட்டே இருந்தேன்.கொஞ்ச,கொஞ்சமா, கொழுந்து விட்டு எரிஞ்ச தீ அடங்கினது.

நான் சிலை மாதிரி அதபாத்துட்டே அங்க உக்காந்துட்டு இருந்தேன்.

அப்போதான் என்னோட சட்டையபிடிச்சு யாரோ பின்னால இருந்து இழுக்க,நான் எரிஞ்சிட்டு இருந்த சுவாமியோட சிதையில இருந்து,பார்வைய திருப்பினேன்.

திரும்பி பாக்கிறேன்..., பக்கத்துல யாருமே..இல்ல...!

ஆனா, சுவாமியோட அந்த காவி உடுப்புல இருந்து ஒரு சின்ன துண்டு,
அந்த தீயில இருந்து பறந்து வந்து,நான் பாத்திட்டு இருந்து இடத்துல, அப்படியே,மிதந்துகிட்டு இருந்தது…!

இதோ…இன்னமும் நான் உன்னோடுதான் இருக்கேன்...."

அந்த நிமிஷத்துல இருந்து,  ஒவ்வொரு கணமும் சுவாமி தன்னோடயே இருக்கறதா, பரிபூரணமா உணர்ந்தபடியேதான் தன்னோட மீதி வாழ்நாள கழிச்சிருக்காங்க நிவேதிதா..,

(இது விவேகானந்தரோட சிஷ்யை நிவேதிதாவோட நேரடியான அனுபவம்)

2 comments:

அ.பாண்டியன் said...

மிக அற்புதமான, அதிசயமான நிகழ்வினைக் கொண்டப் பதிவுக்கு முதலில் உங்களுக்கு நன்றி. படிக்கும் போதே உடம்பெல்லாம் சிலிர்த்துக் கொண்டது. உண்மைத் துறவிகளின் ஆன்மாக்கள் அற்புதங்கள் செய்வதை எண்ணும் போது பிரமிக்க வைக்கிறது. பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.

பிரபஞ்சவெளியில் said...

நன்றி...நன்றி..நன்றி