Monday, February 10

இன்றும் முருகர் தவம் செய்துகொண்டிருக்கும் இடம்.! பிப்ரவரி 14 பௌர்ணமி அன்று எல்லோரும் தரிசிக்கலாம்..!

திருமலை திருப்பதி - பிரபஞ்ச ரகசியங்கள் - பாகம் - 09

(2014ஜனவரி 25 அன்று தந்தி டிவியில் ஒளிபரப்பான பகுதியிலிருந்து)

முருகனுக்கும், பெருமாளுக்கும் என்ன தொடர்பு, முருகன் எப்போ திருமலைக்கு வந்தாரு..இப்படி நமக்கும் நிறைய கேள்விகள் இருந்தது. அதே மாதிரி நிறையபேர் கேள்வி கேட்டிருந்ததால, அதையெல்லாம், இந்த நிகழ்ச்சியில பதில் சொல்லிட்டு இருக்குற திருப்பதி கோயில் பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர் முன்னால வச்சோம்..அதுக்கு அவர் சொன்ன பதில்தான் இந்த பதிவு,



"திருமலையில் பாபவிநாசத்துக்கு அருகில் இருக்கும் குமாரதாரிகா தீர்த்தம் பற்றி சொல்லும்போது, அங்கு முருகர் தவத்தில் இருப்பார் என்று சொல்லியிருந்தேன்

அதைப்பற்றி சில கேள்விகள் வந்திருக்கின்றன

பக்தர்களின் சந்தேகங்களைத் தீர்க்க இப்போழுது நான் சில விவரங்களை கூற விரும்புகிறேன்.

'குமாரதாரீகா வாசஸ் கந்தா வைசஸ் பிரதாய.. 'என்று அஷ்டோத்ர சதநாமாவளியில் வருகிறது.

தாரகாசுர சம்ஹாரத்தின்போது, சக்தியை வேண்டி முருகப்பெருமான் இந்த குமாரதார என்ற தீர்த்த ஸ்தலத்தில் மஹாவிஷ்ணுவை நோக்கி தவமிருந்ததாகவும்

மஹாவிஷ்ணு அவருக்கு பிரத்யட்சமாக வந்து தாராகசூரனை சம்ஹரிக்க சக்தி கொடுத்ததாகவும்ஸ்கந்த புராணத்தில் வருகிறது.

அதற்குப்பிறகு முருகன் தாரகாசூரனை சம்ஹாரம் செய்து அந்த பாவத்தை நீக்க மறுபடியும், குமாரதாரா தீர்த்தத்தில் தவமிருந்து தினமும் திருவேங்கடமுடையானை சேவித்து, அவருக்கு தங்க கிரீடத்தை பரிசளித்ததாகவும், சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த சந்தர்ப்பத்தில் பரமசிவனும் அங்குவந்து முருகனை ஆசீர்வதித்ததாகவும, திருவேங்கடமுடையான் பரமசிவனிடம் முருகனைப்போன்ற பிள்ளையைப் பெற்றதற்கு பாராட்டியதாகவும் மிகவும் அழகான சொற்களில் சொல்லப்பட்டிருக்கிறது.


கலியுகம் முடியும் வரை முருகனால் போற்றப்பட்ட திருவேங்கடமுடையான் என்றுகூட சொல்லப்பட்டிருக்கிறது

முருகனுக்கும் திருவேங்கடமுடையானுக்கும் உள்ள தொடர்பு பற்றி  வேங்கடாசல மஹத்மியத்தில் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது"  என்று விளக்கம் அளித்தார் டாக்டர் ரமண தீட்சிதர் 

இன்னைக்கும் முருகர் தவம் செஞ்சிட்டு இருக்கறதா சொல்லப்படும் இடம்தான் குமாரதாரா தீர்த்தம், 
குமாரதாரா தீர்த்தம் (இதன் அருகில்தான் முருகர் தவம் செய்யும் இடமும், சிலைகளும் உள்ளன)

தினமும் இந்த தீர்த்தத்துல இருந்து முருகர் திருப்பதி ஸ்ரீ திருவேங்கடமுடையானை வந்து தரிசனம் செஞ்சிட்டு போறதா நம்ப ப்படுகிறது. அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த குமாரதாரா  தீர்த்தம் பக்தரிகளின் வசதிக்காக வருடத்தில் ஒரேமுறை மட்டுமே திறந்து விடப்படுகிறது.
குமாரதாரா தீர்த்தத்திற்கு செல்லும் வழி

குமாரதாரா தீர்த்தத்திற்கு செல்லும் வழி

பாபவிநாசனம் தீர்த்தத்திலிருந்து சிறிதுதூரம் காட்டுப்பாதையில் நடந்துசென்று இந்த தீர்த்தத்தை தரிசிக்கலாம். 
மலையிலிருந்து கீழிறங்க உதவும் இரும்பு படிக்கட்டுகள்

இரும்பு படிக்கட்டுகளை பார்வையிடும் தேவஸ்தான ஊழியர்கள்

இந்த மாசி பௌர்ணமி அன்று இங்க உலகில் உள்ள முக்கோடி தீர்த்தங்களும் வந்து கலப்பதாக ஐதீகம். அந்த தினத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து அதிகாரிகளும், அர்ச்சகர்களும் குமாரதார தீர்த்தம் சென்று பூஜைகள் நடத்தி பிரசாத விநியோகம் செய்து வருவது வழக்கம். 

மலைகள் சூழ்ந்த  குமாரதாரா தீர்த்தம் 

மலைகள் சூழ்ந்த குமாரதாரா தீர்த்தம்
(இங்குதான் முருகன் தவம் செய்யும் இடம் உள்ளது)
முடிந்தவர்கள் வருகிற பிப்ரவரி 14 பௌர்ணமி அன்று, திருமலைக்கு போய் குமாரதாரா தீர்த்தத்தில் நீராடி, ஒரே நேரத்தில் முருகப்பெருமானின் அருளையும், திருவேங்கடமுடையானின் அருளையும் பெற்று  சகல சௌபாக்யங்களுடனும், ஐஸ்வர்யங்களுடனும்  வாழ, எல்லாம் வல்ல திருவேங்கடமுடையானை பிரார்த்திக்கிறேன்..ஓம் நமோ வேங்கடேசாய..! 

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அறியாத தகவல் ஐயா... நன்றி...

பிரபஞ்சவெளியில் said...

நன்றி..நன்றி..நன்றி

vv9994013539@gmail.com said...

puthu anupavam. nandri.