Thursday, January 9

குழந்தை இல்லாதவங்களுக்கு திருப்பதியில் வழங்கப்படும் பிரசாதம்..!

திருமலை திருப்பதி - பிரபஞ்ச ரகசியங்கள் - பாகம் -03

ஞாயித்துக்கிழமை(ஜனவரி05,2014) ஒளிபரப்பான இந்தபகுதியில மிகமுக்கியமான ஒரு விஷயத்தப்பத்தி திருப்பதி கோயிலோட பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர் பேசியிருக்காரு.



குழந்தைஇல்லாத தம்பதிகளுக்கு இது ஒரு அற்புதமான செய்தி..!

ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும், திருமலை திருப்பதியில பெருமாளுக்கு அமிர்தகலசம் அப்படிங்கிற ஒரு பிரசாதம் நைவேத்யம் செய்யறாங்க. இது
அரிசிமாவு, மிளகு,வெல்லம், நெய் சேர்த்து செய்யப்படும் ஒரு பிரசாதம்.

சாமிக்கு நைவேத்யம் செய்துவிட்டு, அடுத்து கருடாழ்வாருக்கு நைவேத்யம் செஞ்சபிறகு, இந்த பிரசாதத்தை பக்தர்களுக்கு விநியோகம் செய்யறாங்க.

இதோட சிறப்பு என்னன்னா, அமிர்தகலசம் சாப்பிடும் தம்பதிகளுக்கு உடனே, குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதுதான்..,

அதுமட்டுமில்லாம,இந்த அமிர்தகலசம் பிரசாதம் எடுத்துக்கொண்ட தம்பதிகளுக்குப் பிறக்கும் அந்த குழந்தையினால் அந்தத் தம்பதிகளுக்கு சிறப்பு உண்டாகும் என்றும் ஆகம சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அளவிற்கு விசேஷ சக்தி கொண்ட பிரசாதம்தான் அமிர்தகலசம்..!

இந்த அமிர்தகலசம் ஞாயிறு காலை மட்டுமே திருமலை திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

அமிர்தகலசம் எனும் இந்தப் பிரசாதத்தை வாங்கறதுக்கு வார,வாரம் ஞாயித்துக்கிழமைகள்ல குழந்தை இல்லாத தம்பதிகள் மத்தியில கடும் போட்டி இருப்பதா சொல்றாரு டாக்டர் ரமண தீட்சிதர்.

ஆனா, வாராவாரம் தனக்கு கிடைக்கும் அமிர்தகலசம் பிரசாதத்தை குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு கொடுத்து உதவுவதாகவும், என்னிடம் பேசும்போது குறிப்பிட்டார்.

குழந்தை இல்லை அப்படிங்கிற மனக்குறையோட தவிச்சிட்ட இருக்கற தம்பதிகள், இந்த அமிர்தகலசம் பிரசாதத்த வாங்கி சாப்பிட்டு, பெருமாளோட அருளால, உங்க குறைய போக்கிக்கலாம்.

அது மட்டுமில்லாம,பெருமாளோட பரிபூரண ஆசியோட பிறக்கும் அந்தக் குழந்தையால, உங்களுக்கும், உங்கள் சந்ததிக்கும் பெருமை கிடைக்கும் அப்படிங்கறதும், எத்தனை பெரிய ஆசீர்வாதம்..!

அதனால, குழந்தை இல்லாத தம்பதிங்க திருப்பதி கோயில்ல, இந்த அமிர்தகலசம் பிரசாதம் வாங்கிச்சாப்பிட்டு, உங்க குறை தீர, எல்லாம் வல்ல அந்த வேங்கடவன் அருளவேண்டும்னு, பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

அமிர்தகலசம் பிரசாதத்துக்கு திருமலையில கடும்போட்டி இருக்கறதால, அத வாங்க முடியாத தம்பதிகள் மட்டும், என்னோட மெயிலுக்கு உங்க விபரங்கள விரிவா எழுதி தொடர்புகொள்ளுங்கள்..!

சம்மந்தப்பட்ட தம்பதிகள் மட்டும் நேரடியாக மெயிலில் தொடர்புகொள்ளுங்கள்(உங்கள் புகைப்படத்துடன்)

அப்படி எனக்கு வரும் கடிதங்களை, நான் நேரடியாக டாக்டர் ரமண தீட்சிதரிடம் ஒப்படைத்து, இந்த அமிர்தகலசம் பிரசாதம் கிடைக்க உதவும்படி கோரிக்கை வைக்க இருக்கிறேன்..!

எனது மெயில் முகவரி ; jayakanthan2007@gmail.com

பக்தர்களின் குறைகள் தீர எம்பெருமான் நிச்சயம் உதவுவார்...இதற்கு, நீங்களும், நானும் தெரிந்தவராக, அறிமுகமானவராக இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை.

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனாம், ஸ்ரீ வேங்கடவன் எனும் ஒற்றைப்புள்ளியில் நாம் அனைவரும்  இணைந்திருக்கிறோம்..ஓம் நமோ வேங்கடேசாய..!

இதோ..அமிர்தகலசம் பற்றின அந்த வீடியோ பதிவு..!

திருமலை திருப்பதி - பிரபஞ்ச ரகசியங்கள் - பாகம் -03

நன்றி ; தந்தி டிவி





4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்...

வாழ்த்துக்கள்...

Unknown said...

நன்றி..நண்பரே.., உங்கள் வழிகாட்டுதலால் 'பிரபஞ்சவெளியில்' அடுத்ததளம் நோக்கி முன்னேறியிருப்பதாக உணர்கிறேன்..நன்றி

vv9994013539@gmail.com said...

ariya thagaval. nandri.

vv9994013539@gmail.com said...
This comment has been removed by the author.