Thursday, August 22

இமயமலை குகைகளுக்குள்ளே, வெளியுலகம் அறிந்திராத ரகசிய குருகுல வாழ்க்கை..!

இமயமலை குகைகளுக்குள்ள..நிறையபேரு தவம் செஞ்சிட்டு இருக்கறதா, நாம எல்லாருமே கேள்விப்பட்டிருப்போம்..,

அது எவ்ளோ பெரிய குகையா இருக்கும்..என்ன ஒரு ஆள் உட்கார்ற அளவு இருக்கும்..இல்லன்னா..இன்னும் கொஞ்சம் பெரிசா இருக்கும்.. அவ்ளோதானே..,அப்படின்னுதானே கேக்கறீங்க..,

ஆமாங்க..நாமெல்லாம் இதுவரை கேள்விப்பட்டிராத ஆச்சரியமான தகவல்கள, இந்த இமயமலை குகைகளுக்குள்ள நேரடியா பாத்துட்டு வந்தவரோட அனுபவத்ததான் நாம இப்ப பேசிகிட்டு இருக்கோம்..

ஞானி லட்சுமணன்..நேத்துதானே..பிரபஞ்சவெளியில நம்ம முன்னால வந்து ஆஜராகி இவரு தன்னையும், இன்னும் சிலரையும் நமக்கு அறிமுகப்படுத்தினாரு…,(முந்தைய பதிவு)

இமயமலை குருகுல வாசத்துல ஞானி லட்சுமணன் கொஞ்சநாள் இருந்திருக்காரு..அதனால, அந்த அற்புத அனுபவங்கள பத்தி நமக்கு சொல்லும்படி கேட்டிருந்தோம்.. 

இதோ ..அவரே அந்த அனுபவங்கள சொல்றாரு..,

ஞானி லட்சுமணன்

“…..11 வயசுல என்ன அழைச்சிட்டுப்போன குருநாதர், ஒரு வருஷம் வரைக்கும் எதுவுமே சொல்லித்தரல..,

காடு,மலைன்னு என்ன இழுத்துட்டு சுத்தினாரு..பசிச்சா, அங்க இருக்குற எதாவது ஒரு வீட்டுல பிச்சை எடுத்து, அத சாப்பிடுவோம்.

தூக்கம் வந்தா, அது காடு, மேடோ..ஏன் சுடுகாட்டுல கூட படுத்து தூங்கியிருக்கோம்.

இப்படியே ஒரு வருஷம் போனது. பெரிய ஜமீனோட வாரிசா இருந்தும் எந்தபொருள்மேலயும் ஆர்வமில்லாம இருந்த என்னோட நிலை, குருவுக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு..

அதுக்குப்பின்னாடிதான், ஒவ்வொரு விஷயமா எனக்கு சொல்லிக்கொடுக்கத் தொடங்கினாரு…

11 வயசுல குருவோட வந்த நான் ஒரு வருஷம் சும்மா இருந்தேன். அதுக்குபிறகுதான், தொடர்ந்து பலவிதமான யோக மார்க்கங்களை குரு மூலமா கத்துகிட்டேன்.. என்னோட 23வது வயசுல முதல் குருகுல வாசம் முடிஞ்சது.

அப்போதான்..என்னோட குரு எனக்கு அடுத்த ஒரு உத்தரவு கொடுத்தாரு.
அதுதான் இமயமலை குருகுலவாசம்…,

ஆமாங்க..என்னோட அடுத்த குருகுலவாசம்..இமயமலைப்பகுதிகள்லதான்..!

அங்க இமயமலையிலயும், அதயொட்டின திபெத் பகுதியிலயும் ஏராளமான லாமாக்கள் தீவிரமான ஆன்மீக தேடலோடு தொடர்ந்து பலவிதமான பயிற்சிகள்ல ஈடுபட்டு ஞான நிலைக்கு உயர்வாங்க..,

அப்படி சில முக்கியமான லாமாக்கள் கிட்ட என்னோட குரு என்ன பயிற்சிக்காக அனுப்பி வச்சாரு.

லாமாக்கள்  எனக்கு ஒரு 6 வருஷம் சில முக்கியமான பயிற்சிகள சொல்லிக்கொடுத்தாங்க..

அப்பதான்..இந்த இமயமலை குகைகளுக்குள்ள இயங்கிட்டு இருக்குற குருகுலங்களுக்கும் நான் போகிற சந்தர்ப்பம் கிடைச்சது.

நாம யாருமே..அவ்ளோ பெரிய குகைகள இதுவரை பார்த்திருக்க வாய்ப்பேயில்லை.

இமயமலையில அப்படி வெளியே தெரியாத நிறைய குகைகளுக்குள்ள..நிறைய குருகுல பயிற்சிகள் இன்னைக்கும் தொடர்ந்து நடந்துட்டுதான் இருக்கு..,

இமயமலை குகை குருகுலங்களில் இதுவும் ஒன்று

அப்படி ஒரு குகைக்குள்ளதான் என்னையும் அழைச்சிட்டு போனாங்க..,

அங்க வழக்கமான நடைமுறை என்னன்னா..,

8 வயசு சிறுவனா, இந்த குகைக்குள்ள போறவங்க, பல வருஷம் உள்ளேயே இருந்து, எல்லா விதமான பயிற்சிகளையும் முடிச்சு, வளர்ந்து ஆளாகி, அதோட ஒரு அனுபூதி அடைஞ்ச குருவாத்தான் (The Enlightened Master) வெளியே வருவாங்க..,

அதுவரைக்கும், அவங்க வெளி உலகத்தையே பார்க்க முடியாது.

இந்த குகைக்குள்ளேயே, அங்க இருக்கறவங்களோட உணவு தேவைக்கான விவசாயம் செய்றாங்க..பாலுக்காக மாடுகள வளர்க்கறாங்க..,

ஆனா, இங்க ஒரு நாளைக்கு 2 ரொட்டி, ஒரு டம்ளர் பால் மட்டும்தான் எல்லாருக்குமே உணவு…அதுக்குமேல யாருக்கும் கிடையாது.

இமயமலை குகைகளுக்குள்ள இப்படி ஒரு இடம், அதுவும் விவசாயம் செய்யற மாதிரியெல்லாம் இருக்குமான்னு..அங்க அத நேர்ல பாக்கற வரைக்கும் எனக்கும் தெரியாது.

ஆனா, குகையோட வெளியில இருந்து பார்த்தா..உள்ளே அப்படி ஒரு அமைப்பு இருக்கறதே யாருக்கும் தெரியாது..அந்த குகையோட நுழைவு வாயில்கூட ரொம்ப சின்னதா….ஒரு ஆள் நுழையறதே ரொம்ப கஷ்டமாதான் இருக்கும்..உள்ளே இப்படி ஒரு பிரம்மாண்டம்..,

என்னோட குருவோட உத்தரவால, எனக்கு அந்த குகைக்குள்ளயும் சில பிரத்யேக பயிற்சிகள் கிடைச்சது.

இமயமலையில கொஞ்சநாள், அதுக்குப்பிறகும் என்னோட குருவோட கொஞ்சநாள்னு, இப்படியே என்னோட 36 வயசு வரைக்கும் என்னோட இரண்டாவது குருகுலம் நடந்தது.

ஞானமார்க்கத்த பொருத்தவரைக்கும் இரண்டு வழிகள் இருக்கு..அதுல ஒன்னு துறவியாகி ஞானியாவது..இன்னொன்னு..இல்லறத்துல இருந்தபடியே ஞானியாவது..,

இதுல என்னோட குரு எனக்கு உபதேசித்தமுறை..இல்லற ஞானி..,

அதனால, குருவருளால, எனக்கு திருமணமும் நடந்தது.

இல்லறத்துல இருந்தபடியே மக்கள்தொண்டு மூலமா ஞானத்தை அடையறதுதான் பேரானந்தம்..அந்த வழியிலதான் நானும் பயணித்தேன்..,

சீனா, ரஷியா தவிர உலகத்துல இருக்குற 220 நாடுகளுக்கு பரலோக சஞ்சாரமா பயணம் செஞ்சு உலகம் முழுக்கு இருக்குற யோக முறைகள ஆய்வு செஞ்சேன்.

அதன்மூலமா, உலகத்துல வெவ்வேறு வடிவங்களோட இருக்குற யோகமுறைகளோட அடிப்படை ஒண்ணுதான்னு புரிஞ்சுகிட்டேன்.

அதனடிப்படையில, உருவாக்கப்பட்டதுதான் இந்த ஞானபோதனாமுறை,

நம்ம உடம்புல, ஞான ஜோதி –5, கர்ம ஜோதி –5, ஆத்ம ஜோதி –1 ன்னு, மொத்தம் 11 ஜோதி நிலைகள் இருக்கு..

அத உணர்த்தத்தான் நம்ம சபையில 11 அணையாஜோதி ஏற்றப்பட்டிருக்கு.

ஒவ்வொருத்தரோட, சக்தியும் அவங்களுக்குள்ளேயேதான் இருக்கு..கடவுள்னு வெளியே எதுவும் இல்ல..கடவுள உருவ வழிபாட செய்யறது, அதுவும்  ஒரு முறை ..அவ்ளோதான்..ஆனா, நாமெல்லாம் இந்த முறையில சிக்கிகிட்டு அடிப்படைய விட்டுட்டோம்…,

அதனாலதான் இப்போ..இந்த அருள் பேரொளி சபை தொடங்கப்பட்டிருக்கு..,

ஞானமடையனும்னு தேடல் இருக்கறவங்க..இங்க வந்து அதுக்கான யோக முறைகள இலவசமா கத்துக்கலாம்..இது ஒரு உண்டியல் இல்லாத கோயில்.., ஆனா, உங்க தேடல் உண்மையா இருக்கணும்,அது ஒன்னு மட்டும்தான் நிபந்தனை, அப்படி இருந்தீங்கன்னா,  அதுக்கான வழிகாட்டுதல் கண்டிப்பா கிடைக்கும்..அது தானா உங்களுக்குள்ளயே நடக்கும்..உங்களால நிச்சயம் அந்த மாற்றங்கள உணரமுடியும்..”

இப்படியெல்லாம் உலகமக்களுக்கு ஞானப்பாதைக்கு புது வழிகாட்டிய ஞானி லட்சுமணன்…,

இதோ..இங்கேதான்..தஞ்சாவூரில் 2011 ஆகஸ்ட் 23ம்தேதியன்னிக்கு(இதுபத்தி ஒரு வருஷத்துக்கு முன்னாலயே தன்னோட சீடர்கள்கிட்ட அறிவிச்சிட்டாரு) அருள்பேரொளிசபையில் மஹாசமாதியடைந்திருக்கிறார்..,

அன்று முதல்..இங்கு சூட்சும ரூபத்தில் இருந்தபடி, இன்னும் பலருக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கிறார்…

அவரது மஹாசமாதி தினமான நாளை(ஆகஸ்ட்23ம்தேதி) இங்கே,(அருள்பேரொளிசபை,எண்;1, ரியாஸ் நகர், பைபாஸ் ரோடு, தஞ்சாவூர் 
போன்; 04362-257595, மொபைல் ; 94867 42791) குருபூஜை நடைபெறுகிறது..

வாருங்கள்..அந்த குருவருள் துணையோடு..நமக்குள் இருக்கும் ஜோதியை தரிசிப்போம்..குருவேசரணம்..!

3 comments:

யதார்த்தன் said...

பிரமாதம். ஒரு குருமகானின் ரகசியத்தை அற்புதமான, ஆனால், மிக எளிமையான நடையில் விவரித்திருக்கிறீர்கள். பயனுள்ள, சுவாரசியமான தகவல்கள்.

பிரபஞ்சவெளியில் said...

அத்தனைக்கும் குருவருளே காரணம், செயல் எதுவும் எனதல்ல..இருப்பினும் உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி..!

vv9994013539@gmail.com said...

Kadantha oru vaarma unga pathivu padithu varukeran. elam padivum miega arumai. vaalthukal.