Wednesday, July 24

42 ஞானியரின் சங்கமம் !


குருபரம்பரையில எழுதறதுக்காக இவங்கள்ல சிலரைப்பத்தி படிச்சிட்டு இருந்தப்போ இப்படி ஒரு குரூப் போட்டோவ குருபூர்ணிமா அன்னைக்கு பார்க்க நேர்ந்தது. ஓரே எடத்துல ஞானமடைஞ்சவங்கள ஒண்ணா பார்க்கறது விவரிக்கமுடியாத ஓர் அனுபவம்.இந்தியா முழுக்க இப்படி ஒருத்தரல்ல..நூறுபேரல்ல...ஆயிரக்கணக்குல ஞானிகள் இருந்துட்டு தான் இருக்காங்க. நம்மோட அறியாமையினால இந்தகாலத்துல அதெல்லாம் சாத்தியமில்லன்னு பொத்தாம்பொதுவா கமெண்ட் அடிச்சிட்டு போயிட்டே இருக்கோம். ஆனா, கொஞ்சம் கவனம் கொடுத்து கவனிக்க ஆரம்பிச்சோம்னா நமக்கு பக்கத்துலயே இவங்க இருப்பாங்க.அத நிச்சயமா உணரமுடியும்.
நம்மை நாம் உணர உதவறதுக்காக இவங்களப்போல பல ஞானிகள் வெவ்வேறு ரூபத்துல ஒவ்வொரு மனிதனை பின்தொடர்ந்துகிட்டே தான் இருக்காங்க.ஆனா, நாமதான் அவங்கள கவனிக்க தவறிடறோம்.இனியாவது குருவை நோக்கி நம்மோட பார்வையை திருப்புவோம்..!

0 comments: