Tuesday, December 4

திருமலைக்கு வரும் காணிக்கைகள் பாகம்-01

ரொம்பநாளாகவே திருமலைக்கு வரும் காணிக்கைகளப்பத்தி எழுதணும்னு விருப்பம் இருந்துட்டே இருந்தது. பத்திரிகைகள்ல வரும் செய்திய பார்க்கற எல்லாருக்குமே, அந்த காணிக்கைய பத்தின ஒரு மலைப்பு மனசுல எழுவதுண்டு. அத பாக்கணும்னு எல்லாருமே ஆசைப்படுவாங்க. அதற்கான முதல் முயற்சி பெருமாள் அருளால இன்னைக்குதான் உத்தரவாகியிருக்கு.
திருமலை திருப்பதியில பெருமாளுக்கு வரும் வித்யாசமான காணிக்கைகள பத்தி இந்தத் தொடர் உங்களுக்கு விளக்கமாக சொல்லும்.


பெருமாளுக்கு காணிக்கையாக்கப்பட்ட தங்கச்சங்கு

 

டிசம்பர் 3ம்தேதியான நேற்று, திருமலை திருப்பதி பெருமாளுக்கு ஸ்ரீகாஞ்சி சங்கர மடம் சார்பாக ஒரு கிலோ எடையுள்ள தங்கச்சங்கு காணிக்கையாக வழங்கப்பட்டது.இதன் மதிப்பு ரூ.30 லட்சம். விசேஷநாட்கள்ல சுவாமிக்கு இந்த தங்கச்சங்கின் மூலமாக அபிஷேகம் செய்யப்படும்னு தேவஸ்தானம் அறிவிச்சிருக்கு.
இதுக்கு முன்னாடி (இப்பதான் கொஞ்சநாளுக்கு முன்னால) எல்லாரையும் ஆச்சரியப்படுத்துன ஒரு காணிக்கை யாரோ ஒரு பக்தர் பெருமாள் உண்டியல்ல மூன்று தங்கசிலைகளை காணிக்கையா செலுத்தியிருந்தாரு.(தன்னோட பெயரை வெளியிட விரும்பாத  சென்னை பக்தர்)

திருமலை உண்டியலுக்கு காணிக்கையாக வந்த அந்த மூன்று  தங்கவிக்ரகங்களில்
முதலாவது ஸ்ரீவெங்கடேஸ்வரா  விக்ரகம் 2கிலோ571கிராம் எடை கொண்ட தங்கத்தாலானது. இந்த விக்ரகத்தில் 1014 வைரம், 552 ரூபி, 197 பச்சைக்கல்,1நீலக்கல் பதிக்கப்பட்டிருந்தது.

இரண்டாவதாக ஸ்ரீ பத்மாவதி தாயாரின் சிலை 101கிராம் தங்கத்தாலானது.

மூன்றாவதாக ஸ்ரீ லட்சுமிதேவியின் சிலை 81கிராம் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது.

ஆக மொத்தம் இந்த மூன்று சிலைகளும் சேர்த்து 

 

இவற்றின் மதிப்பு  ஒரு கோடியே இருபத்தைந்து லட்சத்து இருபத்தேழு ஆயிரத்து எண்ணூறு ரூபாய்!(Rs.1,25,27,800.00/-) 


காணிக்கையா வந்த அந்த மூன்று விக்ரகங்களை இந்த வீடியோவுல பாருங்களேன்!       

 

 

 

 

 

     ஓம் நமோ வேங்கடேசாய !








1 comments: